Skip to main content

விற்பனையான அனுமதி பாஸ்; அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

Sale Passes! Local people in shock!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா நவம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு உச்சத்துக்கு வந்துள்ளது. 11 நாட்களுக்கு மலை உச்சியில் தீபம் காட்சியளிக்கும்.

 

டிசம்பர் 6 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகாதீபமும் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஏற்றப்படும் மகாதீபத்தையும், மகாதீபத்தன்று மட்டும் வெளிவந்து பக்தர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் காண பக்தர்கள் விரும்புவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவிற்கு வருகிறார்கள். அவ்வளவு பேரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. அதிகபட்சம் மூன்றாம் பிரகாரத்தில் 10 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும் என்பது பொதுப்பணித்துறையின் கணக்கு.

 

இதனால் இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோவிலுக்குள் வருவதற்கு பாஸ் அச்சடித்து வழங்குகிறது. பாஸ் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி நடக்கிறது எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டதால் பாஸ் வழங்குவதில் சில விதிமுறைகளை வகுத்து தந்துள்ளது நீதிமன்றம். அதன்படி மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை, அரசுத்துறையை சேர்ந்தவர்கள், கோவில் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் போன்றவர்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும். பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளது.

 

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேர் எதிராக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பாஸ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த பாஸ்கள் யாருக்கு தரப்படுகின்றன. அதற்கான முழு பட்டியல் யாரிடம் உள்ளது என அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கேட்டால் தங்களது தலைமையைக் கைகாட்டுகின்றனர். துறைத் தலைமை, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது என அவர்களை கைகாட்டுகிறது. உள்ளூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கே பாஸ் கிடைப்பதில்லை. ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் முக்கியப் பிரமுகர்கள் பாஸ் வைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே இருக்கிறார்கள்.

 

Sale Passes! Local people in shock!

 

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாஸ் 2 ஆயிரம் ரூபாய் தந்து வாங்கினேன் என வரிசையில் செல்லும் ஒருவர் சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

விவரம் அறிந்தவர்கள் நம்மிடம், ஒரு பாஸ் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இந்த பாஸ்கள் பெரும்பாலும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலில் பணியாற்றுபவர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்ட புரோக்கர்கள் வழியாகவே விற்கப்படுகிறது. இப்படி பாஸ்கள் விற்பனை மூலமாக லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். இதில் அனைவருக்கும் பங்கு போகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் பாஸ் விற்பனை நடக்கிறது. இப்போது அதிக விலை போவதற்கான காரணம், கோவிலுக்குள் சாதாரண பொதுமக்களை அனுமதிக்காமல் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பணம் உள்ளவர்களை மட்டும் அனுமதிப்பதால் வரும் பிரச்சனை. தற்போதைய ஆட்சியில் இந்த நிலை மாறும் என நினைத்தோம், மாறவில்லை.

 

தீபத்திருவிழாவின் போது மட்டும் இந்த பாஸ் விற்பனை பற்றி கோபமாக பேசிவிட்டு அப்படியே விட்டுவிடுவதால் அடுத்து வரும் வருடமும் இது நடக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுகிறது.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.