Skip to main content

காந்தி ஜெயந்தியில் மது விற்பனை... காந்தியவாதிகள் கண்டனம்

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Sale of alcohol on Gandhi Jayanti... Gandhian condemned

 

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் மதுபான கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது. சமூக நல்லிணக்கன உறுதிமொழி, மதுவுக்கு எதிரான கோஷங்களை முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் வாயிலில் 2 டாஸ்மாக் கடைகளின் வெளியே இன்று சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகின. மது அருந்துவோர் கூட்டம் கூட்டமாக கடைக்கு வழக்கம்போல் கடை திறந்திருக்கும் நேரத்தில் வருவது போல் அதிகாலையில் இருந்து  மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.  ஒரு பாட்டிலின் விலை ரூ 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தின் வாயிலில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதன் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, கலால் துறை உள்ளிட்ட எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

மதுவுக்கு எதிராக போராடிய மகாத்மா பிறந்தநாளில் அரசு மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் கள்ளத்தனமாக காவல்துறை உதவியுடன் சுதந்திரமாக இதுபோன்று மது விற்பனை நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என காந்தியவாதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த டாஸ்மாக் கடை பேருந்து நிலையம் அருகே உள்ளதால் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுகிறது. இதனால் டாஸ்மாக் உள்ள சாலைவழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிப்படைகிறார்கள் எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.