Skip to main content

காந்தி ஜெயந்தியில் மது விற்பனை... காந்தியவாதிகள் கண்டனம்

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Sale of alcohol on Gandhi Jayanti... Gandhian condemned

 

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் மதுபான கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது. சமூக நல்லிணக்கன உறுதிமொழி, மதுவுக்கு எதிரான கோஷங்களை முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் வாயிலில் 2 டாஸ்மாக் கடைகளின் வெளியே இன்று சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகின. மது அருந்துவோர் கூட்டம் கூட்டமாக கடைக்கு வழக்கம்போல் கடை திறந்திருக்கும் நேரத்தில் வருவது போல் அதிகாலையில் இருந்து  மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.  ஒரு பாட்டிலின் விலை ரூ 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தின் வாயிலில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதன் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, கலால் துறை உள்ளிட்ட எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

மதுவுக்கு எதிராக போராடிய மகாத்மா பிறந்தநாளில் அரசு மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் கள்ளத்தனமாக காவல்துறை உதவியுடன் சுதந்திரமாக இதுபோன்று மது விற்பனை நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என காந்தியவாதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த டாஸ்மாக் கடை பேருந்து நிலையம் அருகே உள்ளதால் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுகிறது. இதனால் டாஸ்மாக் உள்ள சாலைவழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிப்படைகிறார்கள் எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.