Skip to main content

" உதயநிதி அண்ணா போல எனக்கு நல்லா நடிக்க தெரியாது... எனக்கு தெரிந்த வரை நடித்துள்ளேன்.." - அண்ணாமலை பேட்டி

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

said that only you can act in this film' '... -Annamalai interview

 

நீச்சல் போட்டியில் பல சாதனை படைத்துள்ள கே.எஸ். விஸ்வாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அரபி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார். கே.எஸ். விஸ்வாஸ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10-வது வயதில் ஒரு விபத்தினால் இரண்டு கைகளையும் இழந்தவர். நீச்சலின் மீது ஆர்வம் உள்ள விஸ்வாஸ் தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியால் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். பின்பு சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையால் பல சாதனைகளை படைத்ததுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''எனக்கு உதயநிதி அண்ணா போன்றெல்லாம் நன்றாக நடிக்க தெரியாது. நான் ஒரு ரொம்ப அவரேஜான ஆக்டர். கர்நாடகாவில் இந்தியன் ஸ்விம்மர் இருக்கிறார். அவருக்கு இரண்டு கைகள் இல்லை. அவர் பேரு விஷ்வாஸ். இந்தியா சார்பாக ஐந்தாறு கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறார். அவர் ஒருநாள் என்னை வந்து பார்த்து 'அண்ணா இந்த மாதிரி ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் இந்தியன்ஸ் ஸ்விம்மிங் கோச்சாக வரவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் எனக்காக நீங்கள் ட்ரெய்னிங் கொடுக்கணும்' என்று சொன்னார். நான் அதற்கு அதற்கெல்லாம் டைம் பத்தாது, நார்மலாகவே என்னை மக்கள் பார்க்க மாட்டார்கள் படமெல்லாம் நடித்தால் பார்ப்பார்களா என்று கேட்டேன். அவர், 'இல்லண்ணா  நீங்கதான் நடிக்கணும்' என்று சொன்னார். சரி ஒரு ரூபாய் சம்பளம் கொடுங்கள் எனக் கேட்டு 5 நிமிடம்  நடித்திருக்கிறேன்.

 

 

அந்த ஒரு ரூபாயைக் கொண்டு போய் போன வருஷம் ஐயப்பன் உண்டியலில் போட்டு விட்டேன். ஏனென்றால் அது எனக்கு கிடைத்த ஊதியம் கிடையாது போலீஸ் அதிகாரி என்ற பெருமைக்கு கிடைத்த ஊதியம். அதை உண்டியலில் போட்டாச்சு. அந்த படத்தில் கொஞ்சம் டப்பிங் மிஸ் இஸ்யூ. இன்று ரிலீஸ் பண்ண வேண்டிய ட்ரெய்லரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் பண்ணுவார்கள். ஒரே ஒரு படம், அதில் ஒரே ஒரு சீன், அதில் கையில்லாத நெஞ்சுரம் மிக்க மனிதருக்கு கோச்சாக வருவதற்கு நான் பெருமைப்படுகிறேன். நான் நடித்தால் என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானே தான் பார்க்கணும். எனக்கு என்னுடைய நடிப்பு திறமையைப் பற்றி தெரியும். எனக்கு அந்த அளவுக்கெல்லாம் நடிக்க வராது. வர வேலையை செய்வோம்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.