Skip to main content

‘ரூ.300 கோடி வேண்டுமா..?’ ரூ.2.70 கோடி ஏமாற்றிய அதிமுக கூட்டணியின் சீட்டிங் வேட்பாளர் கைது...!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Rs 2.70 crore cheated by Rajasekaran has been arrested

 

கடன் வாங்கித் தருகிறேன் என ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒருவரை அதிகாலை 3 மணி அளவில் காரைக்குடி போலீஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர் தெலுங்கானா போலீஸார்.

 

2018ல் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிங்கோடி பகுதியினைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், தனது மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தும் நோக்குடன் வங்கிக் கடனுக்கு அலைந்திருக்கிறார். இவ்வேளையில், இவரது பணத்தேவையை அறிந்துகொண்ட ராஜேஷ் சந்திரன் மற்றும் பெருமாள்ராஜ் ஆகியோர், "தங்களுக்கு தெரிந்த செட்டியார் ஒருவர் பெரிய அளவில் கடன் கொடுப்பதாக ஆசைகாட்டி எஸ்.ஆர். தேவர் என்றழைக்கப்படும் ராஜசேகரை கடன் கொடுக்கும் செட்டியாராக அறிமுகம் படுத்தியுள்ளனர். 

 

'ரூ.300 கோடி என்பது எளிதான விஷயம். ஆனால் இதற்காக டாக்குமெண்ட் சார்ஜ், முதல் தவணைத் தொகை என அட்வான்ஸ் தொகையாக மட்டும் ரூ.2.70 கோடி கொடுக்க வேண்டுமென' ராஜசேகர் கூற, அதற்கடுத்த சில நாட்களிலேயே ராஜசேகர் கேட்ட மொத்தத் தொகையும் செட்டில் செய்துள்ளார் லட்சுமி நாராயணன். எனினும் நாட்கள் நீண்ட நிலையில் இவர் கேட்ட ரூ.300 கோடி கடன் வரவில்லை. இதனால் கடந்த 2020ம் ஆண்டு, தான் ஏமாந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் ராஜசேகரை தேடிவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பண மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள எஸ். ராஜசேகர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதும், இதற்கு முன்பாக சிவகங்கை திருநெல்வேலி மாவட்டங்களில் இவர் மீது ஆறு பண மோசடி வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.