Skip to main content

1.26 கோடி ரூபாய் நிலத்திற்காக விவசாயி கொலை! சாராய வியாபாரி உட்பட 2 பேர் கைது! 

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சுப்ரமணி

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் திட்டத்துடன் விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சாராய வியாபாரி உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (74). விவசாயியான இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரில் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை, உள்ளூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (55) என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக பெருமாள் அவருக்கு 10 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருந்தார். 

 

இந்த ஒப்பந்தம் நடந்த சில நாள்களில், அதாவது கடந்த மார்ச் 23ஆம் தேதி விவசாயி சுப்ரமணி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கனகம் என்பவர், தன்னுடைய உறவினர் சுப்ரமணியை காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தினர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுப்ரமணி காணாமல் போனது ஆத்தூர் சரகத்திற்குள் வந்ததால், இந்த வழக்கின் தொடர் விசாரணையை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுப்ரமணிக்கு குடும்பமோ, நேரடி வாரிசுகளோ இல்லாததை அறிந்த சாராய விபாயாரி பெருமாள், அவரிடம் கொடுத்த 10 லட்சம் ரூபாய் முன்பணத்தையும் பறித்துக்கொண்டு, வாரிசு இல்லாத சொத்தை முற்றிலும் அபகரிக்கும் நோக்கில் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
பெருமாள்

 

தன்னுடைய திட்டத்திற்கு உள்ளூரைச் சேர்ந்த ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், 19 வயது வாலிபர் உள்பட 6 பேரை ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் சுப்ரமணியை கொலை செய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் கரும்பு தோட்டத்தில் அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டதும் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூவரையும் முதற்கட்டமாக ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டும்படி கூறினர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் சடலம் ஏதும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களாக தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து பிடிபட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்தனர். 

 

இவர்களில் தினேஷ், ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜன் முன்னிலையிலும், முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் முன்னிலையிலும் டிச. 5ஆம் தேதி மாலையில் சரணடைந்தனர். ஏற்கனவே கைதானவர்களில் ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். சரணடைந்தவர்களுள் ஒருவரான முஸ்தபாவையும், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் சுப்ரமணியின் சடலமோ அவருடைய எலும்புகளோ கிடைக்கவில்லை. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சக்திவேல்

 

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சேலத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல்துறையினர் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் டிச. 5ஆம் தேதி இரவு கைது செய்தனர். அவர்களையும், திங்கள்கிழமை (டிச. 6) காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

 

இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். சடலம் புதைக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலான நிலையில், அதன் எலும்புத்துண்டுகள் கூட கிடைக்காதது தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. உண்மையில், சடலத்தை அவர்கள் சக்திவேலின் தோட்டத்தில்தான் புதைத்தார்களா அல்லது வேறு எங்காவது புதைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

விவசாயி சுப்ரமணி கொலை சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.