Skip to main content

திருச்சியில் தொடரும் ரவுடிகள் கைது நடவடிக்கை! 

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Rowdies to be arrested in Trichy

 

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற முன்விரோத கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை ஈடுசெய்யும் விதமாக திருச்சியில் உள்ள முக்கிய ரவுடிகள், கொலையாளிகள் என கடந்த நான்கு நாட்களில் சுமார் 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், திருச்சி மாநகரத்தில் காந்தி மார்க்கெட், பொன்மலைப்பட்டி ஆகிய இடங்களில் கடந்த வாரங்களில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக, மாநகரில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றித்திரியும் ரவுடிகள் சிறப்புப் பதிவேடு குற்றவாளிகளைக் கைது செய்ய மாநகரக் காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, மாநகரம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிரடி வேட்டை நடந்துவருகிறது. முதல் நாளில் இரு ரவுடிகளும், இரண்டாவது நாளில் 42 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும், சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் 31 பேரும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 38 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை சுமார் 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ரவுடிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.

 

இந்நிலையில், தப்பிச்சென்ற ரவுடிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துவருகின்றனர். அந்தவகையில், நேற்று (21.09.2021) ஒரே நாளில் வழிப்பறி மற்றும் திருடர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருச்சி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்த சரத், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான பிரபாகரன் மற்றும் கங்காதரன், தீரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாரதி, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.