Skip to main content

கொட்டித் தீர்க்கும் கனமழை; அழுகும் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கன மழையால் நாகை பகுதியில் 500 க்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துவருகின்றனர்.

 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகிக் கடந்த இரண்டு மாதங்களாகவே தினசரி மழை கொட்டித் தீர்த்தது. அந்த நீர்வடிவதற்குள் வடகிழக்கு பருவமழையும் துவங்கி, இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

நாகப்பட்டினம் அடுத்துள்ள கீழ்வேளூர் பகுதிகளில்  பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர்  பரப்பிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கருங்கண்ணி, கர்ணாவெளி, ஆளக்ககரை,  வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிப்  பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அந்தப் பகுதி விவசாயிகள்  மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகிவிட்டது. இதற்குக் காரணம் இந்தப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாமல் போனதன் விளைவே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளது. பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட  பயிர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவேண்டும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.