Skip to main content

கொட்டித் தீர்க்கும் கனமழை; அழுகும் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கன மழையால் நாகை பகுதியில் 500 க்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துவருகின்றனர்.

 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகிக் கடந்த இரண்டு மாதங்களாகவே தினசரி மழை கொட்டித் தீர்த்தது. அந்த நீர்வடிவதற்குள் வடகிழக்கு பருவமழையும் துவங்கி, இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

நாகப்பட்டினம் அடுத்துள்ள கீழ்வேளூர் பகுதிகளில்  பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர்  பரப்பிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கருங்கண்ணி, கர்ணாவெளி, ஆளக்ககரை,  வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிப்  பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அந்தப் பகுதி விவசாயிகள்  மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.

 

Rotting rice crops; Delta farmers in pain!

 

ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு பதினைந்தே நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகிவிட்டது. இதற்குக் காரணம் இந்தப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாமல் போனதன் விளைவே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளது. பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட  பயிர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவேண்டும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.