Skip to main content

ஆபரேஷன் மின்னல்வேக ரவுடி வேட்டை; சிக்கிய ராக்கெட் ராஜா

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Rocket Raja arrested in kerala airport

 

ராக்கெட் ராஜா. ஒரு காலகட்டத்தில் தாட்டியமாக வலம் வந்தவர். கராத்தே செல்வினின் கூட்டாளியும் வலது கையுமாகச் செயல்பட்டவர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளைப் பக்க முள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர். ஆறுமுகப்பாண்டியன் என்கிற பாலவிவேகானந்தன் என்ற பெயரைக் கொண்டவர். கராத்தே செல்வினின் கூட்டாளியாக அதிரடியாகச் செயல்பட்டதுடன் துடிப்பான இளைஞர்களின் வட்டத்தைக் கொண்டவர் என்றதால் பின்னாட்களில் ராக்கெட் ராஜா என்றழைக்கப்பட்டார்.

 

காரத்தே செல்வினின் மறைவிற்குப் பின்பு வெங்கடேசப் பண்ணையாரின் பக்கம் இணைந்தவர். சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர். வெங்கடேசப் பண்ணையாரின் மறைவிற்குப் பின் பனங்காட்டுப்படை என்ற கட்சியை உருவாக்கிய ராக்கெட் ராஜா அதன் நிறுவனரானார்.

 

தன் மீதான் பல்வேறு வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளிலிருந்து ராக்கெட் ராஜா விடுதலையானாலும், பேராசிரியர் செந்தில்குமார் என்பவரது கொலை வழக்கு உள்ளிட்ட சிலவைகள் இன்றைய லெவல் வரை விசாரணையில் உள்ளன. இதன் காரணமாகவே சென்னை, மும்பை, புனே என்று தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருப்பவர் ராக்கெட்ராஜா. தவிர மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி பெண்ணை திருமணம் செய்த ராக்கெட் ராஜா, கொல்கத்தாவின் நேபாள பார்டரில் உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்திருக்கிறார். அங்கிருந்தபடியே மும்பை, புனே என்று பறப்பவர், அங்குள்ள தமிழர்களிடம் வட்டிக்குப் பணம் கொடுக்கல் வாங்கலான ஃபைனான்ஸ் தொழிலையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.

 

இதனிடையே அவ்வப்போது தனது சொந்த ஊரான ஆனைகுடிக்கு வரும்பொருட்டு, வழக்குகள், போலீசின் தேடல்களிருந்து தப்பிப்பதற்காக சென்னை வழியைத் தவிர்த்து விட்டு மும்பை, கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்திறங்குபவர் அங்கிருந்து நாகர்கோவில் வழியாக பக்கமுள்ள ஆனைகுடி வந்து விட்டுத் திரும்புகிற ராக்கெட் ராஜாவின் பயணங்கள் ரகசியமாகவே வைக்கப்படுமாம்.

 

Rocket Raja arrested in kerala airport

 

இந்த நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதியன்று நள்ளிரவு நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரிப் பக்கமுள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமித்துரை என்கிற வாலிபர் தனது வீட்டின் முன்பு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அவரை வளைத்த மர்ம கும்பல் ஒன்று காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது. ஏரியாவில் சூட்டைக் கிளப்பிய இந்தக் கொலைச் சம்பவம் பற்றி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 2019ன் போது நாங்குநேரி அருகேயுள்ள ஏர்வாடி பக்கமிருக்கும் கோதைசேரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது கொலைக்குப் பழிக்குப் பழியாக சாமித்துரை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 2019ன் போது சாமித்துரையும் அவரது சகாக்களும் இரவு வேளை நாங்குநேரி அருகேயுள்ள டாஸ்மாக் ஒன்றில் மது அருந்தியிருக்கின்றனர். அது சமயம், செல்வக்குமாரும் தனது நண்பர்களுடன் அதே பாரில் மது அருந்தியிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகியதில் செல்வகுமார் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.


இந்தச் சம்பவத்தில் சாமித்துரையும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கடந்த ஜூலை 28 அன்று செல்வகுமார் தரப்புகள் பழிக்குப் பழியாகப் கொலை செய்திருக்கின்றாராம். இதனிடையே சாமித்துரை கொலை தொடர்பாக செல்வகுமாரின் உறவினர் முருகேசன், விக்டர் உட்பட, சஞ்ஜிவ்ராஜ் ஸ்ரீராம்குமார், ஆனந்த், ராஜசேகரன், பிரவீன் ராஜ், ராஜ்பாபு, ஆனந்தராஜ் மற்றும் ஜேக்கப், உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.


இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரை நாங்குநேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், சம்பவத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் தலைவர் ராக்கெட் ராஜா உட்பட ஒரு சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததையடுத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி.யான ரஜத் சதுர்வேதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராக்கெட் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

 

Rocket Raja arrested in kerala airport

 

இந்த நேரத்தில் டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு, ஆபரேஷன் மின்னல்வேக ரவுடி வேட்டையை மாநிலம் முழுமையிலும் நடத்த உத்தரவிட்டதையடுத்து ஒவர் நைட்டில் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் ராக்கெட் ராஜாவையும் வளைக்க தனிப்படை வியூகமெடுத்தது. ராக்கெட்ராஜாவின் பயோடேட்டா முழுமையையும் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பிய தனிப்படை, இவர் எந்த விமான நிலையத்திற்கும் வந்தடையும் பொருட்டு விமான டிக்கெட் போட்டால் உடனடியாக தொடர்புடைய காவல் தலைமைக்குத் தகவல் தர வேண்டுமென்று அவசர அறிவுறுத்தலனுப்பியிருக்கிறது. அதே சமயம், வழக்கமாக தனது சிகிச்சையின் பொருட்டு ஆனைகுடி வந்து செல்லும் ராக்கெட் ராஜா மும்பையிலிருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ப்ளைட் டிக்கெட் போட, தகவல் மின்னல் வேகத்தில் தனிப்படைக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வத்திறங்கிய ராக்கெட்ராஜாவை ஏ.எஸ்.பி. ரஜத் சதுர்வேதி தலைமையிலான தனிப்படையினர் வளைத்துக் கஷ்டடிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர், என்கிறார்கள்.


சாமித்துரை கொலையில் தொடர்புடையவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.


குறிப்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் வேக ரவுடிகள் வேட்டையில் ராக்கெட் ராஜாவின் அரெஸ்ட் தென் மாவட்டத்தில் பரபரப்பையும் தகிப்பையும் கிளப்பியிருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.