Skip to main content

இருளர் சமூகப் பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு! - உறவினர்கள் சாலை மறியல்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

road blockade for not road proper road to grave yard

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது வழுக்கம்பாறை. இந்தப் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களில் யாராவது ஒருவர் இறந்துபோனால் சடலத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவ்வப்போது பிரச்சனைகளைச் சந்தித்து வந்துள்ளனர்.

 

சுடுகாட்டிற்குச் செல்வதற்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தருமாறு வட்டாட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தரவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருளர் இனப் பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து போயுள்ளார். இதையடுத்து, அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஆனால் ஒரு தரப்பினர் அந்த வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வழிவிட மறுத்து தகராறில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால், கோபமுற்ற பழங்குடி இருளர் இன மக்கள் அந்தச் சடலத்தை செஞ்சி திருவண்ணாமலை சாலையில் குறுக்கே வைத்து கறுப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சடலத்துடன் சாலை மறியல் செய்துவந்த பழங்குடி இருளர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

இதையடுத்து சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டுச் சடலத்தைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்தப் போராட்டத்தினால் செஞ்சி திருவண்ணாமலை சாலையில், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சுடுகாட்டிற்கு, இறந்தவர் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று பழங்குடி இருளர் இனமக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.