Skip to main content

திருச்சி விமானநிலையத்தில் அதிகரிக்கும் கடத்தல் சர்ச்சைகள் - அதிரடியாக செயல்படும் சுங்கத்துறை அதிகாரிகள்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Rising smuggling controversy at Trichy airport - Customs officials in action

 

திருச்சி விமானநிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்திவருவது தொடர்ந்துவரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று (17.09.2021) வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த விசுவநாதன் என்ற பயணியிடம் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

மேலும், துபாயில் இருந்து 2 எக்ஸ்பிரஸ் விமானங்கள் நேற்று இரவு திருச்சிக்கு வந்தன. இந்த விமானங்களில் வந்த பயணிகளைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் கான் என்பவர், கீழக்கரை போலீசாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டுவரும் குற்றவாளி என தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் முகமது ரியாஸ் கானை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்த கீழக்கரை போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.

 

மேலும், திருச்சி விமானநிலையத்தில் இருந்து சார்ஜாவிற்குப் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த நவாஸ்கான் என்பவரிடம் 2.2 லட்சம் மதிப்பிலான ரியால், திருச்சியைச் சேர்ந்த முகமது இசாக் என்பவரிடம் 2.34 லட்சம் மதிப்பிலான ரியால், சென்னை புதூரைச் சேர்ந்த பீர்முகம்மது என்பவரிடம் 2.28 லட்சம் மதிப்பிலான ரியால் என வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6.82 லட்சம் ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்'-துரைமுருகன் அதிரடி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Removal of Jaber Sadiq from DMK'-Duraimurugan takes action

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை நிரந்தமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.