Skip to main content

கல்விக்கடன் கிடைக்காமல் தவித்த மாணவி; களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

rishivandiyam dmk mla solved for nursing student education loan issue 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் தீவிர கவனம் செலுத்தும் முதன்மையான சட்டமன்ற உறுப்பினர்களில் வசந்தன் கார்த்திகேயனும் ஒருவர். அவரது தொகுதியில் வறிய நிலையில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் இப்படிப்பட்டவர்களுக்கு அரசு திட்டங்களை கொண்டுசேர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் சங்கராபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ். இவரது மகள் சுஷ்மிதா. இவர் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சுஷ்மிதா முழு அளவில் பணம் செலவு செய்து படிக்க முடியாத நிலையில் இருந்தார். எனவே அவர் படிப்புக்கு கல்விக்கடன் கொடுத்து உதவி செய்யுமாறு பகண்டை கூட்டு சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வங்கி மேலாளர் சுஷ்மிதாவிற்கு கல்விக்கடன் வழங்குவதற்கு மிகுந்த தாமதம் செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சிக்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார். எம்எல்ஏ வந்திருக்கும் தகவல் அந்த மாணவி சுஷ்மிதாவிற்கு தெரியவந்தது. அங்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை மாணவி நேரில் சந்தித்து தனது படிப்பிற்கு வங்கி கடன் உதவி செய்து தராமல் இழுத்தடிப்பது குறித்து முறையிட்டுள்ளார். அதைக் கேட்டு மனம் வருந்திய எம்எல்ஏ மாணவி சுஷ்மிதாவை கையுடன் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் மாணவிக்கு கல்விக்கடன் தராதது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

 

அதோடு மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் மாணவி நிலை குறித்து எடுத்து கூறினார். அதோடு உடனே மாவட்ட ஆட்சியர் சரவண்குமாரிடம் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரிடம் இது குறித்து விவரம் தெரிவிக்கக் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளரிடம் மாணவி நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாக மாணவிக்கு கல்விக்கடன் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவிக்கு கல்விக்கடன் வழங்க வங்கி முன்வந்தது. மாணவி சுஷ்மிதா எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கண்ணீர் வழிய நன்றி தெரிவித்துள்ளார். இது போன்று பாதிக்கப்படும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் எம்எல்ஏ தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.