Skip to main content

'அரிசி விலை கிலோவுக்கு 30 ரூபாய் ஏறும்' - அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் அதிர்ச்சி

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Rice price to rise by 30 rupees per kg'-Rice Mill Owners Association shocked

 

‘தவிச்ச வாய்க்கு ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா’ என்கிற ஏக்கத்தில் டெல்டா மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்கள் காத்துக் கிடக்கின்றன. பயிர்களைக் காப்பாற்றக் குளம், குட்டைகளிலிருந்து குடத்தில் தண்ணீரைக் கொண்டு தெளிக்கும் அவலமான சூழல் நிலவி வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடைமடைப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒருமுறையும், பல கிராமங்களுக்கு இன்று வரை தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. மேட்டூர் தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியில் இறங்கிய விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் அரிசி பஞ்சம் ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதேநேரம் இடைத்தரகர்கள் பதுக்கலால் புழுங்கல் அரிசியின் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயரும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 'Rice price to rise by 30 rupees per kg'-Rice Mill Owners Association shocked

 

இன்று திருவாரூரில் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது சங்கத்தின் நிர்வாகியான முகமது மீரான் பேசுகையில், ''தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஒரிசா, வெஸ்ட் பெங்கால் இந்த ஐந்து மாநிலங்களில் மக்கள் அதிகமாக பாயில்டு அரிசி சாப்பிடுவார்கள். இப்பொழுது விளைச்சல் சரியில்லாததால் ஒரு மாதம், இரண்டு மாதத்திலேயே கிலோவிற்கு விலை பதினைந்து ரூபாய் ஏறும். இது 30 ரூபாய் என விலை ஏறிப் போகும். இதில் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிக்குத் தான் இந்த ஆதாயம். இப்படியே விட்டால் சாமானிய மக்கள் ரொம்ப பாதிக்கப்படுவார்கள். எனவே மாநில அரசு மத்திய அரசிடம் சொல்லி விலையேற்றத்தை தடுப்பதற்கு ஏற்றுமதியை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எங்களது கருத்து'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.