Skip to main content

4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றம்... அரசு மருத்துவமனையின் சாதனை!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Removal of dollars stuck in the throat of a 4-year-old child ... Challenging achievement of the government hospital!

 

தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தை சம்பவத்தன்று (தடை காரணமாக குழந்தையின் பெயரும் படமும் தவிர்க்கப்பட்டடுள்ளது.) காலையில் வழக்கம் போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த செயினை வாயில் கவ்வியபடியே விளையாடியிருக்கிறது. திடீரென அந்தச் செயினில் உள்ள உலோக டாலர் அறுந்து போனதின் விளைவு தவறுதலாக அந்த உலோக டாலரை குழந்தை விழுங்கி விட்டது. உலோகப் பொருளான அந்த டாலர் வயிற்றுக்குள் செல்லாமல் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில். சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

 

இதைக் கண்டு பதறிய பெற்றோர் துடித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை தூத்துக்குடியின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்த்தனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் குழந்தையின் மேல் உணவுக் குழாய் மட்டத்தில் தொண்டையில் உலோக டாலர் சிக்கிக் கொண்டதைக் கண்டறிந்தனர்.

 

இது போன்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியின் டீன் நேருவின் அறிவுறுத்தலின் பேரில் காது – மூக்கு – தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் சிவசங்கரி, சந்தான கிருஷ்ணகுமார்,  ராபின் ரிச்சர்ட்ஸ், மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழுவின் பலராம கிருஷ்ணன், சுகிர்தராஜ் ஆகியோர் அடங்கி குழுவினர் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து உணவுக்குழாய் உள்நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த உலோக டாலரை அகற்றினர்.

 

குழந்தைக்கான இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாகவே செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனின் அவசரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக்குழுவினரை. டீன் நேரு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மற்றும் துணைக் கண்காணிப்பாளர் குமரன் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பாராட்டினர்.

 

குழந்தை விழுங்கிய டாலரைச் சுற்றியுள்ள கூர்மையான பாகங்கள் குழந்தையின் தொண்டையில் அழுத்திக் கொண்டிருந்தது. எனவே கவனமாக சிகிச்சையை மேற்கொண்டோம். மிகவும் ரிஸ்க்கான இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் திறம்பட மேற்கொண்டனர் என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தினர்.

 

4 வயது குழந்தை தொடர்பான உட்சபட்ச சிக்கலான தொண்டையில் சிக்கிய உலோக டாலரை அரசு மருத்துவர்கள் குழு அகற்றியது அரிய சவாலான சாதனையாகப் பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.