Skip to main content

வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் சீண்டல்; தென்காசியில் மத போதகர் கைது

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 Pastor arrested in thenkasi for taking video and sexually harassing women

 

தென்காசியில் மத போதகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள வடக்கு சிவகாமிபுரத்தின் பிலிவர்ஸ் சர்ச்சில் நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் மத போதகராகப் பணியாற்றி வருபவர். இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அரசல் புரசலாக தகவல் கசிந்த நிலையில், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.

 

அதில், '3 குழந்தைகளுக்கு தாயான தன் மகள் விருதுநகரில் வசிப்பவர். வயிற்று வலியால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதன்பின் மகளை சிவகாமிபுரம் பிலிவர்ஸ் சர்ச்சிற்கு கூட்டிச் சென்று மத போதகர் ஸ்டான்லி குமாரிடம் அவளுக்காக ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தனது மகளை 3 நாட்கள் அங்கு தங்கச் சொன்னார். அவர் மீதான நம்பிக்கையால் மகளை தங்க வைத்தேன். ஆனால் மதபோதகர் எனது மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து தனது 2வது மகளிடம் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்பது போல் நடித்து போலீசில் புகார் செய்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.

 

மேலும் அவர், அருணாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதைப் படம் எடுத்ததுடன் அவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவர் சர்ச்சுக்குள் நவீன சுழல் வீடியோ, ஆடியோக்களுடன் கேமராக்களை பொருத்தி சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

 

இந்தப் புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆலங்குளம் டி.எஸ்.பி. அனுப்பிய புகாரைப் பெற்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி, எஸ்.ஐ. கவிதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவங்கள் நடந்ததும், மதபோதகர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும் தெரிய வர அவரைக் கைது செய்த போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போன்றதொரு புகாரில் கடந்த வாரம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைதான நிலையில் தற்போது பாவூர்சத்திரம் மதபோதகர் ஒருவர் கைதானது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.