Skip to main content

3 தலைமை ஆசிரியைகள் பாலியல் புகார்... வட்டார கல்வி அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Regional Education Officer Suspended!

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஆகிய நான்கு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நாகாகோணானூரில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ராதா ராணி, பூதிபுரம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் கருக்காம்பட்டி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துச்செல்வி ஆகிய மூன்று தலைமை ஆசிரியைகள்  வட்டார கல்வி அதிகாரி அருண்குமார் மீது பாலியல் புகார் ஒன்றை வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரியிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் புகார் கொடுத்தனர். 

 

அந்த புகாரில் ஒரு தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களை அண்ணா என்று உறவு முறை வைத்து அழைக்கிறாய் அவர்கள் எனக்கு மைத்துனர்கள். அப்போ நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றும், அதே நேரத்தில் அந்த தலைமை ஆசிரியையின் தோழியையும் அவரது கணவரையும் தொடர்புப்படுத்தி தவறான பார்வையில் பேசப்பட்டு வருவதாகவும் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வரும் போதெல்லாம் தவறான பார்வையில் பார்த்து வருவதாக ஒரு தலைமை ஆசிரியை புகார் கொடுத்துள்ளார்.

 

அதுபோல் மற்றொரு தலைமை ஆசிரியையிடம் இரட்டை அர்த்தத்துடன், கணவர் இறந்து தனியாக எப்படி இருக்கிறீர்கள் எனக்கூறி மனதைப் புண்படும்படி பேசி இருக்கிறார். அதேபோல் இன்னொரு தலைமை ஆசிரியை மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகம் சென்றபோது, இருக்கையில் அமரச் சொல்லி டீச்சர்  நீங்கள்லாம் எனக்கு எட்டாக்கனியாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்தும் எழுத்தில் சொல்லமுடியாத நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், ஆபாசப் படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருவதால் மிகுந்த மன உளைச்சலிலிருந்து வருவதாக வேதனையுடன் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Regional Education Officer Suspended!

 

இந்த குற்றச்சாட்டு பற்றி  வட்டார கல்வி அதிகாரி  அருண்குமாரிடம்  கேட்டபோது, ''பாலியல் புகார் கொடுத்த மூன்று பள்ளி தலைமை ஆசிரியைகள்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டதன் அடிப்படையில் என் மீது பொய்யான பாலியல் புகார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்'' என்று கூறினார்.

 

இதுபற்றி  வேடசந்தூர் மாவட்ட கல்வி அதிகாரி கீதாவிடம்  கேட்டபோது, ''மூன்று பெண்கள் உள்பட ஒரு மாற்றுத்திறனாளி ஆணும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் விசாரணையை முடித்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குப் புகார் பற்றிய விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து துறை ரீதியான உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

 

இந்நிலையில் தான் வட்டார கல்வி அலுவலர் அருணிடம் விசாரணையை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி சம்பவம் நடைபெற்றது உண்மை என அறிந்து அவரை துறை ரீதியாக பணியிடை நீக்கம் அதிரடியாகச் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

 

அப்படி இருந்தும் இந்த விஷயத்தை ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் விசாகன் காதுக்குக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விசாகனும் பாலியல் புகார் உண்மை என்று தெரியவந்தால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.