Skip to main content

மீட்கப்பட்ட அசலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் நிலம்..

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Recovered Asalambika Udanurai Vaithiyanatha Swamy Temple land ..

 

கடலூர் மாவட்டம், திட்டுக்குடி பகுதியில் அமைந்துள்ளது அசலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில். கடந்த 50 வருடங்களாக இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் அங்குள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசில், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் சேகர் பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான பல்வேறு கோயில் நிலங்களை மீட்டுவருகிறார். 

 

அந்தவகையில், 50 வருடங்களாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்துவந்த அசலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்கு வாழ்த்துக்களும் நன்றியயும் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்த திட்டக்குடி அருள்மிகு அசலாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 86 சென்ட் அதாவது சுமார் 40,000 சதுர அடி நிலத்தை உயர் நீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்த உலக சிவனடியார் திருக்கூட்டம் உறுப்பினர் த. மாயவேல் பி.ஏ., அயன் தத்தனூரின் பெரும் முயற்சியுடனும் அவரோடு இணைந்து பணியாற்றிய திட்டக்குடி சிவஸ்ரீ க. ராஜசேகர சுவாமிகள் மற்றும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மெய்யன்பர்கள், திட்டக்குடி சிவனடியார்கள் திருக்கூட்டம் மெய்யன்பர்கள், திட்டகுடி சார்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்புடனும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதல் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒத்துழைப்புடனும், மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.