Skip to main content

“இதற்கெல்லாம் காரணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரே” - அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

"The reason for all this is the Chief Minister of Tamil Nadu MK Stalin" - Minister I. Periyasamy speech

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் மருதாநதி அணை பகுதியில் புதிய கட்டடத் திறப்பு விழாவும் பயனர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மண்டல சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசி, முன்னிலை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திருமாவளவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஒன்றியச் செயலாளர்கள் பிள்ளையார்நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த விழாவில், அய்யம்பாளையும்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டடத்தை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது, “அணையில் தண்ணீர் திறந்துவைக்க வரும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், இந்த அணை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரால் கட்டப்பட்டது. இருபது வருடத்தில் முதன்முறையாக முதல் போக நெல் விவசாயத்திற்கு இப்போதுதான் தண்ணீர் சரியான காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிந்துள்ள புதிய விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க உத்தரவிட்டதால், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கினோம். இதன்மூலம் 40% விவசாயிகள் அதிகரித்துள்ளனர். தமிழகத்தில் விவசாய தொழில் அழிந்துவரும் நிலையில், அதைப் பாதுகாக்கும் வண்ணமாக தமிழக முதல்வர் கொடுத்த பணம் கை கொடுத்துள்ளது.

 

இங்கு மருதாநதி அணை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கேட்டு மனு கொடுத்துள்ளார்கள். விரைவில் குறை தீர்க்கப்படும். இதுபோல மலை கிராமமான புல்லாவெளி பகுதியிலும் பகுதிநேர நியாய விலைக் கடை கேட்டுள்ளார்கள். விரைவில் அப்பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்படும். மருதாநதி அணை அருகிலுள்ள ஏ.கே.ஜி நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டுள்ளார்கள். ஒருமாத காலத்தில் அவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் விடும்போது விவசாயிகள் சங்கம் ஒன்று சேர்ந்து, தண்ணீர் திறந்துவிடுங்கள், தண்ணீர் திறந்துவிடுங்கள் என ஏங்கிய காலம் போய் விவசாயத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுகிறோம். நீங்கள் விவசாயம் செய்யுங்கள் என சொல்லும் காலம் உருவாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரே. அவர் விவசாயிகள் நலன் காப்பதில் முழு மூச்சாக செயல்படுகிறார். அதனால்தான் முதல் போக விவசாயத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கோட்டையை அடுத்த வாடிப்பட்டி வரையிலான விவசாயிகள் பயனடைவார்கள் என்றார். அதிமுக ஆட்சிக்காலத்தில் முதியோர்களுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் நிவாரண உதவித்தொகை விரைவில் அவர்களுக்கு கிடைக்கும்” என்று கூறினார்.

 

இந்த விழாவில் திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் வினோத், அன்பரசு, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வகுமார், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ஹேமலதா மணிகண்டன், அய்யம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், மலைச்சாமி, ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது