Published on 29/04/2022 | Edited on 29/04/2022

தமிழகத்தில் எலிக்கொல்லி பசைக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் எலிக்கொல்லி பசை விற்பனைக்கு தடைவிதிக்க சிறப்பு கவன திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.