Skip to main content

தேவகௌடா உறவினர் பெண்ணிடம் அத்துமீறல்! சிக்கலில் ரமணர் ஆஸ்ரமம்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Rmanar Ashramam in trouble

 

கர்நாடக மாநிலம் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா திமே கௌடா. திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் ரமணர் ஆசிரம நிர்வாகிகள் மீது பரபரப்புக் குற்றஞ்சாட்டி புகார் தந்துள்ளார். புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, "முன்னாள் பிரதமர் தேவகௌடா, நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் உறவினர் நான். என் கணவர் அசோஷ் ஷங் சொந்தமாக பிசினஸ் செய்துக்கிட்டு இருக்கார். நான் 2010ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பௌர்ணமியன்று அன்னதானம் செய்துவந்தேன்.

 

2015ஆம் ஆண்டு ரமண மகரிஷி ஆஸ்ரம நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன், கண்ணன், தன்னார்வலர்கள் ஜெயந்தி பிரேம்குமார், பிரேம் குமார் ஆகியோர் என்னைச் சந்திந்து, 'நீங்க ஏன் ஏதோ ஒரு இடத்திலருந்து அன்னதானம் செய்றீங்க? ஆஸ்ரமத்தில் இருந்தே அன்னதானம் செய்ங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்க செய்யறோம்'னு சொன்னாங்க. என்னோட உதவியாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னி மூலமாக 15 லட்சம் பணம் தந்து 2015ஆம் ஆண்டு தீபத் திருவிழாவின்போது சமையல் செய்ய பெங்களுரூவில் இருந்து 50 சமையல்காரர்களை அழைத்துவந்து 15.11.2015, 22.11.2015ஆம் தேதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினேன். 22-4-2016 அன்று, அன்னதானத்துக்கு பெங்களூருவிலிருந்து பிராமண சமையல் மாஸ்டர்களை அழைத்து வரச்சொன்னார் சிவதாஸ் கிருஷ்ணன். அதன்படி அழைத்து வந்தேன். அதில் 25 பேரை, "கறுப்பாயிருக்காங்க, பூணூல் போடலை'ன்னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டார்.

 

பக்தர்களுக்கு வழங்குவதற்காக லட்டு, குலாப் ஜாமூன் செய்தார்கள். "இதெல்லாம் எதுக்கு? இவ்ளோ ஏன் செய்தீங்க?'ன்னு காலால் எட்டி உதைச்சி நாசமாக்கினார். "ஏன் இப்படி நடந்துக்கறீங்க'ன்னு கேட்டதுக்கு, "இங்க பூணூல் போட்டவங்கதான் சமையல் செய்யணும், மத்தவங்க செய்றதை ஏத்துக்க முடியாது'ன்னு சொன்னார். அவருடைய தவறுக்காக மன்னிப்பு கேட்கச் சொன்னபோது, என்னை, "ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக'க் கூறி மிரட்டினார். அடுத்ததாக, 3-5-2016ஆம் தேதி, ஆஸ்ரமத்துக்கு வெளியே சாலையோரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவிடாமல் என்னை சிவதாஸ் கிருஷ்ணன் மிரட்டியதால் பயந்துகொண்டு ஊருக்கு போயிட்டேன்.

 

Rmanar Ashramam in trouble
சுனிதா திமே கௌடா

 

பின்னர், அதுகுறித்து 25-6-2016ஆம் தேதி திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகாரளித்தேன். அதையடுத்து, சமையல் இன்சார்ஜ் கண்ணன் மட்டும் மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்தார். ஆஸ்ரம அன்னதானத்துக்காகக் கொடுத்த 30 லட்ச ரூபாயில் பெரும்பகுதியை, என் உதவியாளர், சிவதாஸ் கிருஷ்ணன், ஜெயந்தி பிரேம் குமார், பிரேம்குமார் ஆகிய நால்வரும் கையாடல் செய்தது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் புகாரளித்த வழக்கு அப்படியே இருக்கு.

 

கடந்த 2022 மே 5-ஆம் தேதி ரமணர் சமாதிக்கு வந்தபோது, அங்குள்ள சன்னதியில் மணி அடிக்கும் சுகுமார், என்னை சிவதாஸ் கிருஷ்ணன் வெளியே தள்ளச் சொன்னதாகக்கூறி செக்யூரிட்டியை வைத்து என்னை வெளியே தள்ளினார். அது மட்டுமல்லாமல், சுகுமார் திடீரெனத் தன்னோட ஆடைகளைக் களைந்து நின்றதும் அதிர்ச்சியான நான் பயந்து வெளியே வந்துட்டேன். அதேபோல், "எத்தனை முறை சொல்றது? எதுக்குடீ வர்ற" என்று சாதிரீதியாகவும் என்னை இழிவாகத் திட்டினார். ஆஸ்ரமத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது. நிறைய மோசடிகள் நடக்கின்றன. அவற்றை நேர்மையாக விசாரித்தால் இன்னும் பல விவகாரங்கள் வெளியே வரும்'' என்றார்.

 

இவ்விவகாரம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம். வழக்கறிஞர் அபிராமன் மூலமாகக் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அபிராமன் நம்மிடம், "ரமணர் ஆஸ்ரமத்தின் பெரும்பகுதி புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அதுகுறித்து பிரச்சனை எழுந்தபோது, ஆக்கிரமித்த இடத்துக்குக் குறைந்தளவு பணம் கட்டி வருவாய்த்துறையில் இருந்து கல் கிரய பட்டாவை வாங்கினார்கள்.

 

அந்த பட்டா பெறுபவர்கள் கிளினிக் நடத்தவேண்டும் என்கிற விதி இருப்பதால் கிளினிக் ஒன்றை நடத்துகிறார்கள். அங்கு சில குற்றச் சம்பவங்கள் நடக்கிறது என்று சொல்வார்கள், அது இப்போது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அப்பெண்மணிக்கு நியாயம் கிடைக்கும் வரை சட்டரீதியாகப் போராடுவோம்'' என்றார்.

 

புகார் குறித்து விளக்கம் பெற ரமணர் ஆஸ்ரமத்துக்குச் சென்றோம். இதுகுறித்து பேச முடியாதென்று நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன் சொன்னதாக அலுவலகத்தில் கூறினர். ரமணர் துறவியாக வலம்வந்தபோது அவருக்கு பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய இடம்தான் இது. அதில் ஆஸ்ரமம் தொடங்கி நிர்வாகத்தைத் தனது தம்பி நிரஞ்சானந்தாவிடம் ஒப்படைத்தார் ரமணர். நிரஞ்சானந்தா மறைவுக்குப் பின் அவரது மகன் வி.எஸ்.ரமணன் ஆசிரம தலைவரானார். 2020-ல் அவர் இறந்தபின் அமெரிக்காவில் மருத்துவராகவுள்ள அவரது மகன் வெங்கட் தலைவராக இருக்கிறார். குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிப்பதால் ஆஸ்ரம நிர்வாகத்தினை சிவதாஸ் கிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளார். இப்போது இவரது நிர்வாகத்தின் மீதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. மேலிடத்துச் செல்வாக்கால் அனைத்தும் கிடப்பில் போடப்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.