Skip to main content

“எங்கள் தலைவர் எப்போதும், யாரையும் புண்படுத்த மாட்டார்” - ரஜினி மன்ற செயலாளர் 

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

rajinikanth will never hurt anyone says fans club Secretary

 

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உலகமெங்கும் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் விதவிதமான முறையில் கொண்டாடி வரவேற்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், சோளிங்கர் சுமதி திரையரங்கில் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என். இரவி தலைமையில், கேரளா செண்டை மேள தாளத்துடன் பால் குடம் ஏந்தி வந்து பாலாபிஷேகம் செய்து உற்சாக நடனங்களுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

ad

 

இது குறித்து மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என் இரவியிடம் பேசியபோது, “தலைவர் படம் திரைக்கு வருகிறது என்றாலே, அது எங்களுக்கு திருவிழா தான். 73 வயது கடந்தும் தன்னுடைய அசாத்திய உழைப்பால் மக்களை மகிழ்விப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதாயத்திற்காக தேவையற்ற விவாதங்களைத் திட்டமிட்டு கிளப்பி வருகிறார்கள். எங்கள் தலைவர் எப்போதும், யாரையும் புண்படுத்த மாட்டார். காரணம் யாரையும் தனக்குப் போட்டியாகக் கருதாமல் தனக்குத் தானே போட்டி என்று கருதுபவர். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் சொன்னது போல எங்கள் தலைவர் ரெகார்ட் மேக்கர்., ரெகார்ட் பிரேக்கர் கிடையாது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஜெயிலர் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

 

rajinikanth will never hurt anyone says fans club Secretary

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, சோளிங்கர், ஜோலார்பட்டை, ஆற்காடு வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படம் நிச்சயம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு நல்ல சாதனைப் படமாக அமையும்” என்றார்.

 

இளம் நடிகர்களின் ரசிகர்களுக்கு போட்டியாக ரஜினி ரசிகர்கள் திரைப்பட வெளியிட்டூக்கு கட் அவுட், பேனர், கொடி, தோரணம், ஊர்வலம், மண் சோறு, பாலாபிஷேகம், ஆராதனை என அலப்பறை செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாளில் அப்டேட் - ‘ரஜினி 170’ படக்குழு அறிவிப்பு

rajini 170 title update

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் பிறந்தநாள் நாளை வரும் நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைப்புடன் சேர்த்து படக்குழு சார்பில் ரஜினியின் பிறந்தநாள் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரஜினிகாந்துடன் என்னுடைய முதல் படம்” - ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி

ar rahman wishes muthu team for re release

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

 இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரீ ரிலீஸாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில் ரீ ரிலீஸ் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரஜினிகாந்த் சாருடன் என்னுடைய முதல் படம். 4கே மற்றும் 5.1 தரத்துடன் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடப்படுகிறது. வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.