Skip to main content

" அடுத்தவர்களைக் குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்.." - ராஜேந்திர பாலாஜி

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

jkl

 

"தேர்தலில் நாம் யாரையும் குறைசொல்லி வாக்கு கேட்க வேண்டாம், அதன் பின்னணியை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான்" என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுக கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்ச்சை பேச்சுக்களை அடிக்கடி பேசி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்குத் தலைப்பு எடுத்துக் கொடுத்து வந்தஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கடந்த மாதம் தமிழகக் காவல்துறை பெங்களூரில் கைது செய்தது. சுமார் 2 வாரகால சிறைவாசத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையிலிருந்து வெளியே வந்தார். தன்னுடைய இயல்புக்கு மாறாகத் தொடர்ந்து அமைதியாக இருந்து வரும் அவர், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிவகாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வேட்பாளர்கள் மக்களிடம் மிகவும் அமைதியாக வாக்கு கேளுங்கள், யாரையும் பற்றி யாரும் குறை கூறி வாக்கு கேட்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் நாம் களப்பணிகளைத் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும். அதிமுக தொழில் அதிபர்களையோ, செல்வந்தர்களையோ நம்பி உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. மாறாகத் தொழிலாளர்கள், பாட்டாளி மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம். சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்க வைக்கும் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் நம்முடையது. எனவே வேட்பாளர்கள் யாரைப் பற்றியும் குறைசொல்லாமல், நம் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள். ஏனென்றால் குறை சொன்னால் அதனால் ஏற்படும் பின்விளைவை அறிந்தவன் நான் என்ற முறையில் சொல்கிறேன். எனவே கடுமையாக உழையுங்கள், வெற்றி நிச்சயம் கிட்டும்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.