Skip to main content

மழைக்காலம் மக்களுக்கு சோதனை காலம்! - விரைந்து நடவடிக்கை எடுக்க பாஜக வேண்டுகோள் 

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Rainy season is a trial period for people! - BJP request to take immediate action

 

மழைக்காலம் துவங்கி விட்டது. இரவு நேரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு விரைந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு  வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத். 

 

அந்த கடிதத்தில், "மழைக்காலம் மக்களுக்கும் அரசுக்கும் சோதனை காலமாக மாறாமல் இருக்க சாலைகள் அதற்குரிய தரத்துடன் சீரமைக்கப்படுவதை முதலமைச்சர்  ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும். செப்டம்பர் 19-ம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர், புறநகர் பகுதிகள், பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் சாலை செப்பனிடும் பணிகளை முதலமைச்சர் கடந்த 21-ம் தேதி நேரில் ஆய்வு செய்தார். 

 

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் சேதமடைந்த சாலைகள் ஓரிரு இடங்களில் மட்டுமே சீரமைக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கியமான சாலைகளிலேயே ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நேர்கின்றன.

 

முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட, சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாக வட சென்னையில் சாலைகள், மற்ற பகுதிகளைவிட மோசமாக உள்ளது. மத்திய சென்னையையும், வட சென்னையையும் இணைக்கும் முக்கிய சாலையான பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்டவை மோசமாக உள்ளன. அதற்கு ரயில்வே மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகளை காரணமாக சொல்கிறார்கள்.

 

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் வெள்ளநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து தற்போது புதிய "தார்" சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு, உரிய முறையில் தார்க்கலவை, ஜல்லி கற்கள் பயன்படுத்தப்பட்டு போடப்பட வேண்டும். ஆனால், அப்படி முறையாக சாலைகள் அமைக்கப்படவில்லை. 

 

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத்தில் உள்ளபடி, "தார்"சாலை அமைக்கும் விதம் குறித்து இடம்பெற்றுள்ள வரைமுறைகளின் படி சரியான அகலம், உயரம், பார் கலவை தார்க்கலவை, பெரிய ஜல்லி கற்கள் மற்றும் சிப்ஸ் என்று சொல்லக்கூடிய சிறிய ஜல்லி கற்கள் என அனைத்து வகையிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி முறையான விகிதத்தில் கலக்காமல் சென்னை மாநகராட்சி பொறியாளர்களின் நேரடி மேற்பார்வை இல்லாமல், சாலைகளின் ஒப்பந்ததாரர்கள் நேரடியாக சாலை போடாமல், சப் காண்ட்ராக்டர் முறைகளில் ஒப்படைத்து விடுவதால் சாலை போடும் நிறுவனங்களின் சூப்பர்வைசர்கள் சாலைகள் குறித்த தரம் அறிந்த வல்லுநர்களாக இல்லாமல், சாலை அமைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் இல்லாத தகுதியற்றவர்களை கொண்டு, சாலைகள் அமைக்கப்படுவதால் முதலமைச்சர் தொகுதியிலேயே மோசமான முறையில் சாலைகள் போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

 

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு இடத்தில் குறிப்பாக திருவிக நகர் பகுதியில், திரு.வி க.நகர் பல்லவன் சாலை, சத்யநாராயண தெரு, அன்பு நகர் போன்ற இடங்களில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாலைகள் தரம் குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 

 

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலான இடங்களில் பெயரளவுக்கே சாலைகள் சீரமைக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

 

எனவே, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்ய வேண்டும். ஏனெனில் கொளத்தூர் உட்பட வட சென்னையின் பல்வேறு பகுதிகள், மழைநீர் வீடுகளுக்குள் புகும் பகுதியாக உள்ளன. 

 

இதற்கு சாலைகளின் உயரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதே காரணம். பழைய, சேதமடைந்த சாலைகளை அகற்றாமல், அதன் மீதே புதிய சாலைகள் அமைப்பதால், சாலைகள் அமைப்பதால், 10, 15 ஆண்டுகள் பழமையான வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுகின்றன. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இதை முதலமைச்சர் நேரடியாகவே பார்த்தார்.

 

எனவே, சாலைகள் அதற்குரிய தரத்துடன் முறையாக சீரமைக்கப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும். சென்னை முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்து தற்போது தீவிரமாக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீவிரமாக வேகமாக தரமற்ற சாலைகளை அமைப்பதை விட, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் தரமுள்ள சாலைகள் அமைப்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்து மற்றும் வேண்டுகோள். இல்லையெனில் வரும் மழைக்காலம் மக்களுக்கு மட்டுமல்ல, திமுக அரசுக்கும் சோதனை காலமாகி விடும்" என்று குறிப்பிட்டுள்ளார் ஏ.என்.எஸ்.பிரசாத்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சட்டப்பேரவை  செயலாளரின் பணி நீட்டிப்பு; தலைமைச் செயலக சங்கம் கண்டனம்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Legislature Chief Secretariat Association condemned extension post of the Secretary

 

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருக்கும் சீனிவாசன், நவம்பர் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், அவரை முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்ததுடன் 3 ஆண்டுகால பணி நீட்டிப்பும் வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்த விவகாரம், கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.  

 

இது குறித்து, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பும் பதவி உயவும் கொடுத்திருப்பது விதிமீறல். பதவி உயர்வுக்காக தகுதியுள்ள பல அதிகாரிகள் காத்திருக்க,  ஓய்வு பெறும் நபருக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கொந்தளிக்கிறார்கள்  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர். 

 

இதே சீனிவாசனுக்கு, கடந்த 2018-ல் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில், சிறப்பு செயலர் நிலையிலிருந்து செயலாளர் பதவிக்கு உயர்வு அளித்தது. அன்றைய அதிமுக சபாநாயகர் தன்பாலுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் இவருக்கு செயலாளராக பதவி உயர்வு அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த விவகாரத்தை 2018-ல் கையிலெடுத்த அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், 'சீனிவாசன் பதவி உயர்வில் விதிகள் கடைப்பிடிக்கவில்லை; விதி மீறல்கள் நடந்துள்ளன என்று கடுமையாக கண்டித்திருந்தார். இது அன்றைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அப்படிப்பட்ட அந்த சீனிவாசனுக்கு, தற்போதைய திமுக ஆட்சியில், முதன்மை செயலாளராக பதவி உயர்வும், மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் கண்டிக்கப்பட்ட சீனிவாசன் என்ற அதிகாரிக்கு திமுக ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று தான் தற்போது அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.  இந்த நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பேரவை செயலக அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசித்து வருகின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்