Rain alert for 23 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் செங்கல்பட்டு, தர்மபுரி, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.