Skip to main content

ஹிந்தியா? கைத்தொழிலா?-அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020

 

question on the government school student admission form !!

 

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த புதிய கல்விக் கொள்கை குறித்தான விவாதங்கள் தமிழகத்தில் உருவாகி இருக்கும் நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் தொடரும் எனத் தீர்க்கமான முடிவினை எடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக படிக்க விருப்பமா என்ற கேள்வி அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  நிலையில் இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார். 

அண்மையில்  கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாகப் படிக்க எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாய்க் கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தக் கேள்வி இடம்பெற்றிருந்தது. இதனால் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறதா என்ற ஐயம் எழுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகதினர் விண்ணப்பப் படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார், ஹிந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வி மாணவர் சேர்க்கைப் படிவத்தில் இடம்பெறவில்லை. இது ஏதோ சில விஷமிகள் செய்த போலி விண்ணப்பம் இணையத்தில் உலாவியுள்ளது. இந்தப் போலியான ஃபார்மெட்டில் மாநகராட்சிக்கு ஒரு கெட்ட பெயர் ஏற்படுவதற்காகச் சிலபேர் தவறான முறையில் உள்நோக்கத்தோடு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.