Skip to main content

சசிகலா குறித்த கேள்வி... பதிலளித்த அதிமுக எம்.பி.

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

 Question about Sasikala ... AIADMK MP answered

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை தி.நகரில் தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும், காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்'' என்றார்.

 

மேலும், ''ஒருவார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர். என்ன காரணம். நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கேனா. கட்சி ஆரம்பித்தது அதிமுகவை மீட்டெடுக்க என்று சொன்னது தப்பா" என்றும் கூறியிருந்தார்.

 Question about Sasikala ... AIADMK MP answered

 

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திடம் தொடர்ந்து சசிகலா குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்பொழுது ''சசிகலா பற்றி அப்புறம் பேசுறேன்'' என நகர்ந்தார் வைத்திலிங்கம்.

 

சார்ந்த செய்திகள்