Skip to main content

வலுவிழந்தது 'புரெவி’ புயல் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

 'Purevi' storm weakens - Minister R.P. Udayakumar interview!

 

'புரெவி’ புயல் பாம்பனை நெருங்கிவரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், தூத்துக்குடியில் மாலை 6 மணிமுதல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அரியலூர்,  தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'புரெவி’ புயல் எதிரொலியாக நாளை ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 'Purevi' storm weakens - Minister R.P. Udayakumar interview!

 

இந்நிலையில், 'புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பிறகு தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய நிலவரப்படி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனால் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறினார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயந்தது உண்மைதான்; நாய் சிங்கமாகாது” - மாறி மாறி மோதிக்கொள்ளும் ஆர்.பி, Vs டி.டி.வி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
''The fear is true; You are a dog''-R.P., T.T.V

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அமுமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்  தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே  உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''ஜெயலலிதா இருந்த வரைக்கும் உங்களை பார்த்து நாங்கள் பயந்தது உண்மைதான். அது சத்தியம் தான். இப்பெல்லாம் நீங்கள் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. அதிமுகவினுடைய தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். அதனால் உங்களிடம் இருந்து விடை பெற்று இந்த இயக்கமும், இயக்கத் தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த பூச்சாண்டி காட்டுவது, நையாண்டி செய்வது அதெல்லாம் ஜெயலலிதா இருக்கும் வரை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. உண்மைதான் உங்கள் வீட்டுக்கு நாங்கள் காவல் நாயாகவும் இருந்திருக்கிறோம். அதே நேரத்தில் இப்பொழுது நீங்கள் எங்களை சீண்டி பார்த்தீர்கள் என்றால் அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறோம்'' எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு டி.டி.வி.தினகரன் பதிலளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''நாய் என்னைக்கும் சிங்கமாகாது. நாய் ஓநாயாகத்தான் மாறும் சிங்கமாக மாறாது. வீட்டுக்கு காவலாளியாக இருந்தோம் என்று சொல்கிறார். எங்க வீட்டுக்கு காவலாளி எங்கள் வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நன்றியோடு இருப்பார்கள். இவர்களெல்லாம் நன்றி இல்லாதவர்கள். துரோக சிந்தனை உள்ளவர்கள்''என்றார்.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.