Skip to main content

ஜல்லிக்கட்டில் வென்ற புதுக்கோட்டை 'புல்லட்' -அமைச்சர் நேரில் வாழ்த்து!

Published on 18/01/2022 | Edited on 19/01/2022

 

Pudukottai bullet Bull

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழன் (எ) தமிழ்செல்வனின் 'புல்லட்' என்கிற காளை நின்று விளையாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசாக காரை வாங்கி வந்திருக்கிறது. இந்த காளை கடந்த 2019 ம் ஆண்டு 2000 காளைகளுடன் சாதனைக்காக நடத்தப்பட்ட  விராலிமலை ஜல்லிக்கட்டில் பங்கேற்று முதல் பரிசான புல்லட் வாங்கி வந்ததால் இந்த காளைக்கு புல்லட் என்றே பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

 

இதேபோல சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் திமுக பிரமுகர் பெயரில் அவிழ்க்கப்பட்ட தமிழனின் கரிகாலன் காளை முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வாங்கி வந்திருக்கிறது. இவரிடம் தற்போது உள்ள 28 காளைகளில் விரும்பனுக்காக நல்ல களமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல பாசமாக இருக்கும் அன்பு, ராப்பூசலில் அவிழ்த்து வென்று வந்த பூந்திக்குட்டை (வென்றுபோது பூந்தி வாங்கி சாப்பிட்டதால் இதற்கு பெயர் பூந்திக்குட்டை) 2 கிமீ வரை வேகமாக ஓடும் அத்லட், பெரியவர் இப்படி பல காளைகள் அடுத்தடுத்த களங்களுக்கு தயாராகி வருகிறது.

 

இவரிடம் இருந்து பயிற்சி பெற்று பல வாடிகளில் வெற்றிபெற்ற கொம்பனை ஓபிஎஸ் கேட்டும் கொடுக்காமல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்டு நின்று விளையாடி பெயர் பெற்றது.இப்படி இவரிடம் உள்ள அத்தனை காளைகளுமே வெற்றி வீரனாகவே உள்ளது.

 

Pudukottai bullet Bull

 

இந்நிலையில் அலங்காநல்லூரில் வென்ற புல்லட்டை பார்க்க பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இளைஞர்களும் நேரில் வந்து பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று புல்லட் கொம்பில் பட்டு வேட்டி கட்டி தடவிக் கொடுத்தவர், காளை உரிமையாளர் தமிழனுக்கும் சால்வை அணிவித்து புதுக்கோட்டைக்கு புகழ் சேர்க்கும் தங்களுக்கும் தங்கள் காளைகளுக்கும் பாராட்டுகள் என்றார். அவருடன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட துணைத்தலைவர் கல்லாலங்குடி அன்பு, எம்.எம்.பாலு உள்பட பலரும் வந்திருந்தனர்.

 

இது குறித்து தமிழ்செல்வன் கூறும் போது.. ''40 வருசமா 400 க்கும் மேற்பட்ட காளைகள் வாங்கி வளர்த்திருக்கிறேன். சூர்யா என்ற காளை தான் எனக்கு முதலில் பெயர்வாங்கி கொடுத்தது. 3 முறை விற்று திரும்பவும் வாங்கி வந்தேன். சூர்யா இப்ப எங்களிடம் இல்லை. ஒவ்வொரு ஊராக போய் பார்த்து கன்றுகளையும் காளைகளை அதன் குணம் பார்த்து வாங்கி வருவேன். பெரிய பயிற்சி என்பதெல்லாம் சும்மா. அதன் குணம் தான் முக்கியம். காளைகளை நான் வாங்கி வந்தாலும் அதனை பராமரிக்க பலர் இருக்காங்க. எல்லாமே அவங்க தான். ஒவ்வொரு முறை காளைகள் வெல்லும் போதும் அந்த மகிழ்ச்சியை அவர்களிடம் பார்த்து நானும் மகிழ்வேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.