Skip to main content

ஜல்லிக்கட்டில் வென்ற புதுக்கோட்டை 'புல்லட்' -அமைச்சர் நேரில் வாழ்த்து!

Published on 18/01/2022 | Edited on 19/01/2022

 

Pudukottai bullet Bull

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழன் (எ) தமிழ்செல்வனின் 'புல்லட்' என்கிற காளை நின்று விளையாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசாக காரை வாங்கி வந்திருக்கிறது. இந்த காளை கடந்த 2019 ம் ஆண்டு 2000 காளைகளுடன் சாதனைக்காக நடத்தப்பட்ட  விராலிமலை ஜல்லிக்கட்டில் பங்கேற்று முதல் பரிசான புல்லட் வாங்கி வந்ததால் இந்த காளைக்கு புல்லட் என்றே பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

 

இதேபோல சில நாட்களுக்கு முன்பு திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் திமுக பிரமுகர் பெயரில் அவிழ்க்கப்பட்ட தமிழனின் கரிகாலன் காளை முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வாங்கி வந்திருக்கிறது. இவரிடம் தற்போது உள்ள 28 காளைகளில் விரும்பனுக்காக நல்ல களமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல பாசமாக இருக்கும் அன்பு, ராப்பூசலில் அவிழ்த்து வென்று வந்த பூந்திக்குட்டை (வென்றுபோது பூந்தி வாங்கி சாப்பிட்டதால் இதற்கு பெயர் பூந்திக்குட்டை) 2 கிமீ வரை வேகமாக ஓடும் அத்லட், பெரியவர் இப்படி பல காளைகள் அடுத்தடுத்த களங்களுக்கு தயாராகி வருகிறது.

 

இவரிடம் இருந்து பயிற்சி பெற்று பல வாடிகளில் வெற்றிபெற்ற கொம்பனை ஓபிஎஸ் கேட்டும் கொடுக்காமல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்டு நின்று விளையாடி பெயர் பெற்றது.இப்படி இவரிடம் உள்ள அத்தனை காளைகளுமே வெற்றி வீரனாகவே உள்ளது.

 

Pudukottai bullet Bull

 

இந்நிலையில் அலங்காநல்லூரில் வென்ற புல்லட்டை பார்க்க பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இளைஞர்களும் நேரில் வந்து பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று புல்லட் கொம்பில் பட்டு வேட்டி கட்டி தடவிக் கொடுத்தவர், காளை உரிமையாளர் தமிழனுக்கும் சால்வை அணிவித்து புதுக்கோட்டைக்கு புகழ் சேர்க்கும் தங்களுக்கும் தங்கள் காளைகளுக்கும் பாராட்டுகள் என்றார். அவருடன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட துணைத்தலைவர் கல்லாலங்குடி அன்பு, எம்.எம்.பாலு உள்பட பலரும் வந்திருந்தனர்.

 

இது குறித்து தமிழ்செல்வன் கூறும் போது.. ''40 வருசமா 400 க்கும் மேற்பட்ட காளைகள் வாங்கி வளர்த்திருக்கிறேன். சூர்யா என்ற காளை தான் எனக்கு முதலில் பெயர்வாங்கி கொடுத்தது. 3 முறை விற்று திரும்பவும் வாங்கி வந்தேன். சூர்யா இப்ப எங்களிடம் இல்லை. ஒவ்வொரு ஊராக போய் பார்த்து கன்றுகளையும் காளைகளை அதன் குணம் பார்த்து வாங்கி வருவேன். பெரிய பயிற்சி என்பதெல்லாம் சும்மா. அதன் குணம் தான் முக்கியம். காளைகளை நான் வாங்கி வந்தாலும் அதனை பராமரிக்க பலர் இருக்காங்க. எல்லாமே அவங்க தான். ஒவ்வொரு முறை காளைகள் வெல்லும் போதும் அந்த மகிழ்ச்சியை அவர்களிடம் பார்த்து நானும் மகிழ்வேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.