Skip to main content

“போலி குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது” ; சி.பி.எம் - விசிக வலியுறுத்தல்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

pudukkottai vengaivayal issue

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் டிசம்பர் 25 ஆம் தேதி மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்ததாகக் கண்டறியப்பட்டு பல்வேறு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களிடமே விசாரணை செய்து வருவதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை நேர்மையாகச் செல்கிறது என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் சிலரது செல்போன்களில் மனிதக் கழிவு கலந்த படங்கள், வீடியோக்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த செல்போன்களை புலனாய்வு விசாரணை குழுவிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இதனால் விசாரணை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள், முனைவர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன் மற்றும் கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய துணைக் குழுவினர் இன்று வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தோம். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மனிதக் கழிவு கலந்தது வன்கொடுமை தீண்டாமையின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. விசாரணை சரியாகத்தான் செல்கிறது. ஒரே பகுதி மக்களை விசாரிப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு., விசாரணை என்பது அப்படித்தான் நடக்கும் அதில் யாரும் தலையிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை குடித்து மன உளைச்சலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கான உதவிகள் வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் பேசிய பிறகு அரசுக்கு அறிக்கை கொடுப்போம் என்றார்கள்.

 

இதனையடுத்து தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை வேண்டும். போலி குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது என்று சிபிஎம், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சமூகநீதி கண்காணிப்பு துணைக் குழுவிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.