Skip to main content

விமான விபத்து என்று வதந்தி பரவிய கண்மாயில் எரிந்தது என்ன? கரிம சோதனை முடிவுகள் என்னாச்சு? 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

pudukkottai district incident peoples officers

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள வசந்தனூர் கண்மாயில் கடந்த மாதம் 12- ஆம் தேதி காலை போர் விமானம் ஒன்று திடீரென விழுந்து எர்ந்து கொண்டிருப்பதாக காட்டுத் தீ போல தகவல் மற்றும் படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. 

 

ஆனால் அந்தப் பகுதியில் சூப்பர் சோனிக் விமானம் வந்து சென்ற பிறகு கண்மாயில் இருந்த கருவேல மரங்கள், புல், செடிகள் எரிந்தது. விமானம் விழவில்லை. விபத்தும் இல்லை என்பதை அந்த கண்மாயில் நின்ற நம் வாசகர்கள் மூலம் அறிந்து நக்கீரன் இணையத்தில் அழுத்தமாக சொன்னோம். 

pudukkottai district incident peoples officers

அதன் பிறகு அதிகாரிகள் சென்று விமான விபத்து இல்லை. கண்மாயில் கருவேல மரங்களும், புல், செடிகளும் எரிந்துள்ளது. அதனை யாரோ விமான விபத்து என்று வதந்தி பரப்பிவிட்டனர் என்றனர். வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் அறிவித்தார்.

 

அதன்படி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அநத புகாரில்.. மேல வசந்தனூர் கண்மாயி்ல் விமானம் விழுந்து எரிந்ததாக படங்களுடன் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

pudukkottai district incident peoples officers

இந்த நிலையில் தான் விமானம் விழுந்து எரியவில்லை என்றால் கண்மாயில் பல இடங்களில் திட்டுத் திட்டாக எரிந்தது எப்படி? என்ற சந்தேகத்தை போக்க தடய அறிவியல் துறையின் சார்பில் எரிந்த இடங்களில் ஆய்வு செய்து சாம்பல்களை சேகரித்துச் சென்றனர். அந்த சோதனையில் தீ பற்றியது எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதால் மாதிரிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சோதனை முடிவுகள் வெளியிடவில்லை. அதனால் எப்படி தீ பற்றியது என்பது பற்றி தெரியவில்லை. இந்த ஆய்வு முடிவு வெளியானால் மட்டுமே அந்த பரபரபான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எப்போது முடிவுகள் வெளியாகும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.