Skip to main content

கரோனா விடுமுறையில் விதைப்பந்துகளைத் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

Published on 21/09/2021 | Edited on 22/09/2021

 

Public school students preparing seed balls for Corona holiday!

 

கரோனா விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் செல்போன்களில் சிக்கிக் கொண்டாலும் கூட நிறைய மாணவர்கள் விடுமுறையைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தியுள்ளனர். விடுமுறை நாட்களை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைப் பயனுள்ள செயல் செய்ய வலியுறுத்தியும் வழிகாட்டியும் செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பரசன் கரோனா விடுமுறை நாட்களில் தனது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி பல பள்ளி மாணவர்களுக்கும் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவாய் வழி தேசிய திறனாய்வுத் தேர்வுக்குப் பயிற்சி கொடுத்த பலரைத் தேர்ச்சி பெறச் செய்துள்ளார்.

 

அதே போலத் தான் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் விடுமுறை நாட்களைப் பயனுள்ள சமூக அக்கறையுள்ள செயலுக்காக மாற்ற நினைத்து விதைப் பந்து தயாரிக்கும் போட்டியை அறிவித்து அதிகமான விதைப்பந்துகளை தயாரிக்கும் மாணவருக்குப் பரிசும் வழங்குவதாக அறிவித்தனர். 

 

போட்டியின் முடிவில் 25,320 விதைப்பந்துகளைத் தயாரித்துச் சாதித்துள்ளனர். அதில் லத்திகா என்ற மாணவி மட்டும் 2,800 விதைப்பந்துகளைத் தயாரித்து முதல் பரிசை பெற்றார். விதைப்பந்து திருவிழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகளையும் வழங்கினார். 

 

அதிகமான விதைப்பந்துகளைத் தயாரித்து பரிசாகப் பெற்ற ரூபாய் 500- ஐ அந்த மாணவி, பள்ளி வளர்ச்சி நிதிக்காக வழங்கியது அனைவரையும் நெகிழச் செய்தது. மாணவியை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் பாராட்டினார்கள். கடந்த வாரம் இதே பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தனக்குக் கிடைத்த நல்லாசிரியருக்கான பரிசுத் தொகை ரூபாய் 10,001- ஐ பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.