Skip to main content

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; இருவர் கைது

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்;438 கடைகள் மூடல்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Banned tobacco products confiscated; 438 shops closed

ஈரோடு மாவட்டத்தில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து  அபராதம் விதிகப்படுவதோடு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட  கலெக்டர்  ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில், புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது போன்ற தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட  கலெக்டர்   ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் மற்றும் 16 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ரோடு ஒருங்கிணைந்து 5181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24,17,630- மதிப்பிலான சுமார் 2822.33 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.1905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூலமாக அழிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள புகை பொருட்கள் காவல்துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கூலிப் மட்டும் 259 கடைகளில் சுமார் 456.605 கிலோ கண்டறியப்பட்டு (அதன் மதிப்பு சுமார் ரூ.3,72,204) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேற்படி, 438 பொருட்கள் விற்பனையாளர்கள் மீது ரூ.69,85,000- அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டு மாவட்ட  கலெக்டர்  உத்தரவின்படி 438 கடைகளும் மூடப்பட்டுள்ளன.  அதில் முதல் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25,000-ம் அபராதமும், இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.  

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.