Skip to main content

பெற்றோர்களின் தொடர் புகாரை அடுத்து விசாரணை வலையத்துக்குள் வந்த தனியார் பள்ளி!!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021
Private school in the investigation zone following a series of complaints from parents

 

கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா இரண்டாம் அலைவரிசை காரணமாக பள்ளிகள் திறப்பதில் அரசுத் தரப்பில் குழப்பம் நிலவி வருகிறது. இப்படி மூடப்பட்ட பள்ளிகள் பலவற்றில் இருந்து பிள்ளைகளின் நலன் கருதி  அவர்களுக்கான பாடங்களை கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், இணையவழி மூலமாகவும்  பாடம் நடத்தப்பட்டு வந்தது.  ஊரடங்கு காரணமாக  பல தரப்பு குடும்பத்தினரும்  வருமானம்  இல்லாமல், குடும்பம் நடத்துவதற்கு மிகவும் தத்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில்  தனியார் பள்ளிகளில்  படித்துவந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில்  75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

 

கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களை  தொந்தரவு செய்யக்கூடாது  என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது, ( முழு கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் பலமாக ஒலிக்கிறது மக்கள் மத்தியில்). இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்விகட்டணம் குறித்து பெற்றோர்கள் வேதனையில் துடித்து வருகிறன்றனர். இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்த கூறி நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக விழுப்புரம் கிழக்கு, புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துமாறு  பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.

 

Private school in the investigation zone following a series of complaints from parents

 

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, கோட்டாட்சியர் திருமாறன் ஆகியோர் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நெரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்ட விவரம், பள்ளி சேர்க்கையில் உள்ள மாணவர்களின் விவரம், கல்விக் கட்டணம் வசூலித்ததற்கான ஆவணங்கள், மாணவர்களிடம் எந்தவித அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விவரம் ஆகியவற்றை பள்ளி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணையின் மூலம் கேட்டறிந்தனர்.

 

இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம்  கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இருதரப்பு விசாரணை முடிந்த பிறகு அந்த விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அரசுக்கு தெரியப்படுத்தி மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடுவார் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

 

இந்த முறையில் பிள்ளைகளுக்கான கல்வி முழுமையாக போய் சேரவில்லை காரணம் அனைத்து பெற்றோர்களிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்து இருப்பது சிரமம். மேலும் பிள்ளைகள் இதன் மூலம் எல்லோரும் ஆர்வமுடன் கல்வி கற்றுக் கொள்ள முன்வருவார்களா என்பது பெரிய கேள்விக்குறி. மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கின்ற சூழலிலும் கட்டணத்தை மட்டும் பறிக்கும் நோக்கத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்பது போல வருமானம் இன்றி தவிக்கும் பெற்றோர்களிடமிருந்து கல்விக் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.