Skip to main content

விருது பெற்ற அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? - பரிதாபமாக இறந்த கர்ப்பிணி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Pregnant woman passed away Aranthangi Government Hospital

 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வந்த பிறகு மாவட்ட மருத்துவமனையாக அறந்தாங்கி மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. மகப்பேறுகால இறப்புகளே இல்லாத அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி விருது வழங்கினார். ஆனால் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் பெற்ற பிறகு கர்ப்பிணிகள் இறப்பு தொடங்கியுள்ளது. 

 

கடந்த 13 ந் தேதி அரசர்குளம் ஜோதி மீனா (26) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், ஜோதிமீனா உயிரிழந்தார். அதேபோல கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு சுகப்பிரசவம் நடந்த நிலையில் ரத்தப்போக்கு நிற்காததால் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பிரசவகால இறப்புகளே இல்லாத இந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தரம் உயர்ந்த பிறகு இப்படி இறப்பு கணக்குகள் தொடங்குவது வேதனையாக உள்ளதாகக் கூறும் பொதுமக்கள் இன்று இறப்புக்கு காரணம் தவறான சிகிச்சையா? அப்படியானால் தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் தொடங்கியதும் அங்கு வந்த ஜெ.டி. ராமு உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்திய பிறகு கோரிக்கைகளை மனுவாக பெற்றுச் சென்றுள்ளனர்.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு பிரிவுகள், உபகரணங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஒப்பந்தப் பணியில் பல மாதங்களாக சம்பளமே கிடைக்காத ஊழியர்களைக் கொண்டே மருத்துவமனை இயங்கி வருகிறது. அதனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சிறப்பு பிரிவுகளை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.