Skip to main content

நடுகடலில் முழ்கிய ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகு

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

A power boat worth one million sunk in the middle sea!

 

நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த மீனவர்களை மீட்க சென்றபோது  1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முழுவதும் மூழ்கி விபத்துக்குள்ளானது. பலத்த காயங்களுடன் நாகை துறைமுகம் வந்த மீனவர்களை பார்த்து மீனவ பெண்கள் கதறி அழுத சம்பவம் பலரையும் உறைய வைத்துள்ளது

 

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் 24ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நள்ளிரவு அவர்களுடைய விசைப்படகு பழுதாகி 13 மீனவர்களும் நடுகடலில் தத்தளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் தனக்கு சொந்தமான விசைப்படகில் வசந்தன், ராம்குமார் ஆகிய மீனவர்களுடன் அவர்களை மீட்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அருணுக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென விழுந்த ஓட்டையின் காரணமாக படகினுள் கடல்நீர் உட்புக தொடங்கியுள்ளது. இதனை பார்த்து கதறி சத்தம் எழுப்பிய மீனவர்கள் படகின் ஏற்பட்ட துளையை அடைக்க முயன்றும் முடியாமல் போனதால் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முழுவதும் நடக்கடலில் மூழ்கியது. 

 

இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்து காயமடைந்த அருண் உள்ளிட்ட மூன்று மீனவர்கள் மற்றும் படகு பழுதாகி தவித்த 13 மீனவர்களையும் மீட்டனர். 1 கோடி ரூபாய் மதிப்பிலான படகை இழந்து இரவில் நாகை துறைமுகம் அழைத்து வரப்பட்ட மீனவர்களை கண்டு அங்கு திரண்டிருந்த அவரது உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் கண்ணிர் விட்டு கதறி அழுதனர். 

 

வட்டிக்கு கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து கட்டப்பட்ட விசைப்படகு மூழ்கியதால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவ பெண்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.