Skip to main content

மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

சில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா’ என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. அந்த வரியை எழுதியவர் ‘வைரமுத்து’ என்று குறிப்பிட்டிருந்தனர். முதியவர் ஒருவரின் படத்தைப் போட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்று அச்சிட்டிருந்த அந்தப் போஸ்டரில், அந்த முதியவரின் பெயர் ஏனோ இடம்பெறவில்லை. 

 

poster

 

‘அவர் யாராக இருக்கும்?’ என்று மனதில் அசைபோட்டபடியே அந்தப் போஸ்டரைக் கவனித்த வெளியூர்க்காரர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.  இன்றோ, அந்தப் போஸ்டரில் இருந்த பெரியவரின் முகத்தையும், வீரமடா என்ற வார்த்தையையும் யாரோ கிழித்திருந்தனர். ஆம். போஸ்டரில் பறைசாற்றப்பட்ட வீரம்,  யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை இச்செயல் உணர்த்துகிறது. 

யார் அந்த முதியவர்? மதுரைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பெயர் நல்லகண்ணு சேர்வை.  ‘மதுரை மண்ணின் அழிக்க முடியாத அடையாளம் மாவீரன் ஐயா நல்லகண்ணு சேர்வை’ என்று ஒரு சமூகத்தினரால் அவர் கொண்டாடப்படுகிறார். மாவீரன் என்ற பட்டம் நல்லகண்ணு சேர்வைக்குக் கிடைத்த பின்னணியைப் பார்ப்போம். 

 

 Posters of heroism in Madurai

 

‘வீரதீர பராக்கிரமம்’ நிறைந்தவராகவும், முதுமைக் காலத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு சேர்வை. பருத்தி வீரன் என்ற பெயரில் சினிமா ஒன்று வந்ததல்லவா! நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா! அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா? நெல்பேட்டை சீனி என்பவர் மிகப்பெரிய தாதாவாக மதுரையில் வலம் வந்தவர்.  தற்போது, மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் அத்தனை தாதாக்களும் நெல்பேட்டை சீனியின் சிஷ்யர்கள்தான்.

 

 Posters of heroism in Madurai

 

நெல்பேட்டையில் இருந்து  ‘பேட்ட’–ஐ உருவி ரஜினி படத்தின் தலைப்பாக வைத்தார் மதுரைக்காரரான கார்த்திக் சுப்புராஜ். பேட்ட சினிமாவில் நெல்பேட்டை சீனி வாழ்க்கையோடு தொடர்புடைய சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட நெல்பேட்டை சீனியும்கூட, நல்லகண்ணு சேர்வையின் வார்ப்புதான்.  எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்று அப்போது சவால் விட்டார் மேயர் முத்து. எம்.ஜி.ஆரையே எதிர்த்த முத்துவின் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் பின்னால் இருந்தவர் நல்லகண்ணு சேர்வை என்று நிறையப் பேசுகிறார்கள் மதுரைவாசிகள்.  

 

 Posters of heroism in Madurai

 

 Posters of heroism in Madurai

 

வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் மதுரைக்காரர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது.  இத்தனை வீரதீர பின்னணி கொண்ட நல்லகண்ணு சேர்வைக்கு போஸ்டர் ஒட்டாமல் இருப்பார்களா? ஆனாலும், இதுபோன்ற போஸ்டர்களுக்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது.  ‘நீ வீரன் என்றால் நான் கோழையா?’ என்ற கோபம்தான் போஸ்டர் கிழிப்புக்குக் காரணமாக இருக்கிறது. 

 

போஸ்டரை சீரியஸாக எடுத்துக்கொள்வதெல்லாம் தமிழகத்தில் சகஜமானதுதான்! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளர்; நடிகர், டாக்டர், அரசியல்வாதி -  யார் இந்த மதுரை சரவணன்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், வேட்புமனு தாக்கல் என்று வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளார் பட்டியலை வெளியிட்டர். அதில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்தவர். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் முகாம் என மதுரையில் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான மருத்துவர் சரவணன், அரசியலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதே படத்தில் இவரும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமானவராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அங்கு ஒருவருடம் இருந்த சரவணன் கடந்த 2016 ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சரவணனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் போஸ் காலமானதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாஜகவில் சேர்ந்தார். கையோடு அவருக்கு பாஜக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவருக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார். மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சரவணனன் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சரவணன், திடீரென அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரையில் விருப்பமனு பெறப்பட்டது. ஆனால், போட்டியிட மதுரை மாவட்டத்தில் அதிமுக சீனியர் நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், விருப்பமனு கொடுத்த சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து எஸ்கேப் ஆகி வந்தனர். 

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

இதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த ஒரே நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான். முக்கிய நிர்வாகிகள் பலரை அதிமுக தலைமை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே மதுரை தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசன் மதுரை தொகுதியில் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி  சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், பிரமாண்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றுவந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவது மதுரை அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.