Skip to main content

புயல்பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுவாரா? பதில் சொல்லாமல் நழுவிய பொன். ராதாகிருஷ்ணன்

Published on 17/11/2018 | Edited on 18/11/2018
p

 
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது.

 

மத்திய அரசின் கடலோர காவல்படை மூலம் 70 கப்பல்களில் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதனால் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனி பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடே இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வாழ்வாதரம் சரியாகும் வரை அரசு உணவை சமைத்து கொடுக்கவேண்டும்’’என்று கூறினார்.

 

மேலும்,  ‘’ஆயிரக்கணக்கான மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள்  பலத்த சேதம் அடைந்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அளிக்கும் அறிக்கையை  கொண்டு மத்திய அரசு நிதியுதவி அளிப்பது குறித்து  பரிசிலனை செய்யும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு நிலவுகிறது. எந்த வேலை வாய்ப்பு திட்டமும் தமிழகத்திற்கு வர வேண்டாம் என சிலர் நினைக்கின்றனர். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதிகளில் நிறைவேற்றப்படும். இதனால் நேரிடையாகவோ மறைமகமாகவோ வேலைவாய்ப்பு அதிகாரிக்கும்.  புயல் பாதித்த பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் இவர்களது உறவினர்கள் கவலை அடையவேண்டாம்.

 

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு முதல் முறையாக மத்திய அரசு ரூ 1400 கோடி கொடுத்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தோராயமாக ரூ 1000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 600 சமஸ்தானங்களை நமது நாட்டோடு இணைத்து அரும்பணியாற்றிய வல்லபாய் பட்டேலுக்கு சிலையை அமைத்ததில் எந்த தவறுமில்லை.

 

புயல்பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுவது குறித்த கேள்விக்கும், உலக புகழ்பெற்ற சுற்றுலா, ஆன்மீக ஸ்தலமான சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஏழைகள் ரதமான அந்தியோதயா ரயில், சிவ ஸ்தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்லும் புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில், பைசாபாத் ரயில் என மூன்று ரயில்கள் நின்று செல்வதில்லை இதனை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற கேள்விக்கும் அமைச்சர் சரியான பதிலை கூறவில்லை.  இவருடன் பாஜகவின் மாநில பிரச்சார அணிசெயலாளர் ராஜரத்தினம்,மாவட்ட பொதுச்செயலாளர் திருமாறன், நகர தலைவர் கனகசபை, கட்சியின் நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொன்னாரை சீண்டிய அண்ணாமலை; உரசலில் தகிக்கும் பா.ஜ.க.!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

BJP Inter politics between pon radhakrishnan and annamalai

 

பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது அவரது கட்சியினரே கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், அண்ணாமலைக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கிறார்கள். காரணம், பொன்.ராதாகிருஷ்ணன் பற்றி அவர் வைத்த விமர்சனம்தானாம்.

 

அண்மையில் கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, "துணிவு பட இயக்குநர் வினோத், அவர் எடுத்த படத்தை அவரே பார்க்கமாட்டார். அவர் கையில் இருப்பதே சாதாரண செல்போன் தான். இப்படி ஒரு மனிதரை நினைக்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது'' என்று இயக்குநர் வினோத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை, அடுத்து ‘துணிவு’, ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான ஒருமணி நேரத்தில் 10 லட்சம் 15 லட்சம் பேர்னு பாக்குறாங்க.

 

அதே நேரத்தில் 9 முறை தேர்தலில் போட்டியிட்ட நம் பொன். ராதாகிருஷ்ணன், ‘ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் தொடர்ந்து பலமணி நேரம் பேசினாலும் அதை யாரும் கேட்கமாட்டேங்குறாங்க’ என்றார் நக்கலாக. இதைக் கேட்டதும், மேடையில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனின் முகம் இறுக்கமாக மாறியது.

 

BJP Inter politics between pon radhakrishnan and annamalai

 

அண்ணாமலையின் இந்த குதர்க்கப் பேச்சு, பொன்னாருக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மறுநாள் அண்ணாமலை கலந்துகொண்ட அருமனை பொங்கல் விழாவை பொன்.ராதாகிருஷ்ணன் புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார்.

 

நம்மிடம் மனம் திறந்த ஒரு பா.ஜ.க, நிர்வாகி “சமீப காலமாக பொன்னார் அண்ணாச்சிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நல்லுறவு இல்லை. சீனியரான பொன்னாரிடம் அண்ணாமலை எதையும் ஆலோசிப்பதே இல்லை. குறிப்பாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை கட்சியின் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளாக அண்ணாமலை நியமித்திருக்கிறார். இதுபற்றி கூட அவர் கலந்து பேசவில்லை. கமலாலயம் சென்றாலும் அண்ணாச்சிக்கு அவர் மரியாதை கொடுப்பதில்லை'' என்றார்.

 

அண்ணாமலை ஆதரவாளர்களோ, "அண்ணாமலை, பொதுவாக சினிமாவுக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் பிரச்சாரத்துக்கு இல்லைன்னுதான் சொல்ல வந்தார். ஆனால் அதை பொன்னார் தப்பாகப் புரிந்துகொண்டார். சரி, அதற்காக ஒரு மாநில தலைவர் கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்ச்சியை பொன்னார் புறக்கணிக்கலாமா? அது மட்டுமா? சமீபத்தில், அண்ணாமலை நியமித்த பா.ஜ.க. மாநில மீனவர் பிரிவுச் செயலாளர் சகாயம், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் சதீஷ்ராஜன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம் ஆகியோரை, பொன்னாரின் ஆதரவாளர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைக்காமல் புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பிறகு எப்படி பொன்னார், அண்ணாமலையிடம் மரியாதையை எதிர் பார்க்கிறார்?” என்கிறார்கள் காரமாகவே.

 

அண்ணாமலைக்கும் பொன்னாருக்கும் இடையிலான உரசல் தமிழக பா.ஜ.க.வில் பெரும் தகிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

Next Story

ரஜினிகாந்த்- பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Published on 06/11/2019 | Edited on 06/11/2019
Rajinikanth: Meeting with Ponthrakrishnan

 

ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு மேற்கொண்டார். மத்திய அரசின் சிறப்பு விருது பெற உள்ள ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.