Skip to main content

காவலாளியை தாக்கியது தவறு - சிம்பு வருத்தம்

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
simbu


காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரி போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்ட பிரபலங்களில், மன்சூர் அலிகான் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை என்பதால் அதைப்பற்றி சிம்பு சென்னை காவல் ஆணையரிடம் விசாரித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது.


"காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடக்கோரி போராட்டங்கள் நடத்திய நடிகர்களும், இயக்குனர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மன்சூர் அலிகான், "அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். என்னையும் கைது செய்யுங்கள்", என்று கோவமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நானும் பார்த்தேன்", 

"அவரும் சில வார்த்தைகள் தவறாக பேசியிருக்கிறார். நானும் பார்த்தேன். ஆனால் என்ன நோக்கத்தில் காவலர்கள் கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதை முதலில் தெரிந்துகொள்ளதான் நான் இங்கு வந்துள்ளேன்", என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
 

"காவேரி மேலாண்மை போராட்டத்திற்காக அன்று சில பிரச்சனைகள் நடந்தது, அதை சிலர் வன்முறை என்றார்கள். ஆனால், அது வன்முறை அல்ல. அதேபோன்று காவலாளி மீது ஒரு இளைஞன் கைவைத்ததை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்".

"அந்த காவலாளி நினைத்திருந்தால் , அந்த பையனை அடித்திருக்கலாம் ஆனால் அவர் தன் கடமையை காப்பாற்ற வேண்டும் என்று அமைதியாக இருந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்"

"காவலர்களை நான் மதிக்கிறேன். அதனால் தான் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு என்று சொல்வார்கள் என்று நம்புகிறேன். மன்சூர் அலிகானுக்கு கிட்னியில் ஆப்ரேஷன் நடந்திருக்கிறது. அதோடுதான் அவர் அன்று என்னையும் கைது செய்யுங்கள் என்று வந்திருக்கிறார். எல்லோரையும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டதைபோல், செய்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவர் பையனை தொடர்புகொண்டபோதுதான் தெரிந்தது. அவர் இன்னும் விடுதலை செய்யபடவில்லை இல்லை" என்று.
 

இவ்வாறு அவர் ஆணையரை சந்திப்பதற்கு முன் தெரிவித்துவிட்டு சென்றார். பிறகு ஆணையரை பார்த்துவிட்டு திரும்பிய சிம்பு, மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் இங்கு ஆணையரை வந்து சந்தித்ததற்கு காரணம், உடம்பு முடியாமல் தமிழன் என்கிற உணர்விற்காக வந்து கைது செய்யப்பட்டார் என்பதாலேயே. மனிதனை மனிதனாக மதியுங்கள்", என்றார்.
 

"எனக்கு அரசியல் தெரியாது", பின்னர் ஓட்டு மட்டும் போடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு. "விரல் வைத்தால் போதும்", என்றார். "என்னை நீங்கள் எல்லோரும் அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். நான் அரசியல் வாதியல்ல, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் சிறப்பாக பதிலளிக்க முடியும். ஆனால், நான் அதற்காக இங்கு வரவில்லை" என்று முடித்துக்கொண்டார்.                         

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.