Published on 27/08/2018 | Edited on 27/08/2018
![ட்](http://image.nakkheeran.in/cdn/farfuture/f9Q8bRkRo4L4W9S4fFTsWjB4OywYAxS_A9SYIDcioXY/1535409930/sites/default/files/inline-images/tharmaraj.jpg)
சேலத்தை சேர்ந்த பேராசிரியர் தர்மராஜ் என்பவர் தமிழ் நாளிதழில் எட்டு வழிச்சாலையை எதிர்த்து கட்டுரை எழுதியிருக்கிறார். அதை த்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் எட்டு வழிச்சாலைக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் துண்டு பிரசுரம் வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் ராயப்பேட்டை காவல்துறையினர் அதே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தர்மராஜ் தரப்பு வழக்கறிஞர் போலீசாரிடம் கேட்டபோது சிறிது நேரம் காத்திருக்குமாறு சொல்லி உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகின்றனர்.