Skip to main content

பள்ளி மாணவர்களை தனது நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்த காவல் ஆய்வாளர்

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவியர்களில் காவல்துறை அதிகாரியாக வருவேன் என கூறிய பள்ளி மாணவியர்களை தனது நாற்காலியில் அமர்த்தி காவல் ஆய்வாளர் ஒருவர் அழகு பார்த்த நிகழ்வு திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் பேசிய வன்கொடுமை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், மாணவர்களிடத்தில் படித்த பின்பு நீங்கள் எந்த வேலைக்கு தேர்வு செய்து படிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டார். அப்போது மாணவர்கள் சிலர் தங்கள் காவல்துறை மற்றும் மருத்துவம் உட்பட  பல துறைகளை கூறினார்கள். காவல்துறை தேர்வு செய்த மாணவர்களை பாராட்டிய காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், வருங்காலத்தில் நீங்களும் இதுபோல் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய இடத்திற்கு வர வேண்டும் எனக் கூறியதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

பின்னர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., எழுத்தர், போலீஸ் ஆகியோரின் பணிகள் புகார் மனு தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கினார். நிறைவாக காவல்துறையை தேர்வு செய்த மாணவ, மாணவிகளை தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவியர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழிப்புணர்வு முகாமில் சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர்கள் கோமதி, டேவிட், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ரவிமுருகன், பாலசுப்ரமணி, நல்லதம்பி, பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயசேகர், தலைமைக் காவலர்கள் உமா, ஜெயபாலா, முதல் நிலை காவலர்கள் பாப்பாத்தி, ஜெயப்ரியா மற்றும் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேலாளர் பாரதிராஜா, சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.