Skip to main content

பள்ளி மாணவர்களை தனது நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்த காவல் ஆய்வாளர்

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவியர்களில் காவல்துறை அதிகாரியாக வருவேன் என கூறிய பள்ளி மாணவியர்களை தனது நாற்காலியில் அமர்த்தி காவல் ஆய்வாளர் ஒருவர் அழகு பார்த்த நிகழ்வு திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் பேசிய வன்கொடுமை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், மாணவர்களிடத்தில் படித்த பின்பு நீங்கள் எந்த வேலைக்கு தேர்வு செய்து படிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டார். அப்போது மாணவர்கள் சிலர் தங்கள் காவல்துறை மற்றும் மருத்துவம் உட்பட  பல துறைகளை கூறினார்கள். காவல்துறை தேர்வு செய்த மாணவர்களை பாராட்டிய காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், வருங்காலத்தில் நீங்களும் இதுபோல் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய இடத்திற்கு வர வேண்டும் எனக் கூறியதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

 

The police inspector made the schoolgirls sit in his chair and saw their beauty

 

பின்னர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., எழுத்தர், போலீஸ் ஆகியோரின் பணிகள் புகார் மனு தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கினார். நிறைவாக காவல்துறையை தேர்வு செய்த மாணவ, மாணவிகளை தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவியர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழிப்புணர்வு முகாமில் சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர்கள் கோமதி, டேவிட், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ரவிமுருகன், பாலசுப்ரமணி, நல்லதம்பி, பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயசேகர், தலைமைக் காவலர்கள் உமா, ஜெயபாலா, முதல் நிலை காவலர்கள் பாப்பாத்தி, ஜெயப்ரியா மற்றும் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேலாளர் பாரதிராஜா, சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.