Skip to main content

காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதி திருப்பத்தூரில் சிக்கினார்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

police incident in thirupathur

 

ஆத்தூரில், பாதுகாப்புக்குச் சென்ற தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்கரவர்த்தி (25). நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் இவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இந்திலியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

 

இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உத்தரவின்பேரில், எஸ்ஐ சுப்ரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் முஸ்தபா, சிவராமன் ஆகியோர் ஜன. 23ம் தேதி நாமக்கல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர்.

 

police incident in thirupathur

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, சக்கரவர்த்தி தனக்கு அவசரமாக சிறுநீர் வருவதாக கூறினார். அதை நம்பிய காவல்துறையினர் அவரை பேருந்து நிலைய பின்புற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்ஐ சுப்ரமணியன், மற்றொரு கைதிக்குப் பாதுகாவலாக பேருந்து நிலையத்திலேயே இருந்தார்.

 

இதையடுத்து, பாதுகாப்புக்கு வந்த காவலர்களுள் ஒருவரான முஸ்தபாவை தாக்கிவிட்டு, சக்கரவர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை துரத்திப்பிடிக்க ஓடியபோது தலைமைக் காவலர் முஸ்தபா கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

 

இந்தச் சம்பவத்தை அடுத்து மற்றொரு கைதியை, எஸ்ஐ சுப்ரமணியன் உடனடியாக சின்னசேலம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். தப்பிச்சென்ற சக்கரவர்த்தியை பிடிக்க ஆத்தூர், சின்ன சேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் ஜன. 26ம் தேதி அதிகாலையில் அங்கு சென்று சக்கரவர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.