Skip to main content

புகார் கொடுக்க சென்ற இளம்பெண்ணுக்கு வன்கொடுமை... இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

police incident in kaniyakumari

 

சமீபகாலமாக வேலியே பயிரை மேயும் கதையாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள். அதேபோல் புகார் கொடுக்கும் பெண்களிடம் போலீசாரே எல்லை மீறும் சம்பவங்கள் என பத்திரிகை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான் குமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து கருக்கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்த திருவனந்தபுரத்தில் நர்சாக பணிபுரியும்  32 வயதுடைய இளம் பெண் கூறும் போது, ''தன்னை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் உடமைகளை பறித்துசென்ற அந்த பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் மீது புகார் கொடுக்க பளுகல் காவல் நிலையத்திற்கு சென்றபோது எனது புகாரை உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் (அவர் தற்போது வீரபாண்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார்) விசாரித்தார்.

 

மேலும் எனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும் கூறி தினமும் செல்ஃபோனில் என்னிடம் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் நான் ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து அதன் உரிமையாளர் மாற சொன்னதால் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் அவர் நண்பர் மூலம் இளம்சிறை பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தந்தார். பின்னர் எனது புகார் மனு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டுக்கு வந்த சுந்தரலிங்கம் ஆசை வார்த்தை கூறி என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்ததையடுத்து அவரிடம் கூறினேன்.

 

police incident in kaniyakumari

 

உடனே அதற்கு அவர் என்னை மிரட்டி கருவைக் கலைக்க வலியுறுத்தினார். மேலும் அவருடைய நண்பர்களும் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருவைக் கலைத்து என்னுடைய எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கினார்கள். மேலும் என்னுடைய உடல் நிலையும் மோசமான நிலைக்குச் சென்றது.

 

இதையடுத்து நான் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையம், தக்கலை சரக துணை சூப்பிரண்ட், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்றார்.

 

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் உடந்தையாக இருந்த ஏட்டு கணேஷ்குமார் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.