Skip to main content

சிறுமி கர்ப்பம்: அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

admk leader pocso act police arrested

 

சேலம் அருகே 17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக அதிமுக பிரமுகரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் ஏரிக்கரையைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் வசந்தகுமார் (வயது 30), அதிமுகவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 2வது வார்டு செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 

 

இவர், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி, நெருக்கமாக பழகிவந்துள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ள சிறுமி, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்தார். 

 

வசந்தகுமார் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டிவந்தார். சிறுமி எங்கேயாவது செல்ல வேண்டுமானால், அவர் தனது வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஊர்க்காரர்கள் மட்டுமின்றி, இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நெருங்கிப் பழகியதை யாரும் தவறாக கருதவில்லை. 

 

இதையெல்லாம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வசந்தகுமார், சிறுமியைத் தனது ஆசைக்கு இணங்கவைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். 

 

சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். 

 

காவல்துறை விசாரணையில் வசந்தகுமார், சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக இருப்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சரக்கு வாகனத்திலேயே சிறுமியைப் பலமுறை வன்கொடுமை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.