Skip to main content

வாலிபர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Police arrest robbers

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியை ஒட்டி உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணா பொறியியல் கல்லூரி. அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களை வழிமறித்த இரு இளைஞர்கள் அவர்களை கத்திமுனையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி அருகே உள்ள கொரட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(22) இவரது நண்பன் தாயனூரைச் சேர்ந்த கார்த்தி , ஞானசேகர், சிவா ஆகிய 4 பேரும் கலை அறிவியல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது 2 மர்ம நபர்கள் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வழிமறித்து கொள்ளையடித்துள்ளனர்.

 

அவர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட நால்வரும் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்களது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை உறுதி செய்தனர். இந்த நிலையில் நேற்று அதே கல்லூரி சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் வழிமறித்துள்ளனர்.

 

Police arrest robbers

 

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில்  எலவசநூர் கோட்டை, அருகிலுள்ள சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் புகழ்வாணன், அவரது நண்பன்  ஓரகடம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தான் திண்டிவனம் பொறியியல் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி செல்போன் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது அதேபோன்று ஐயன் தோப்பு, சந்தைமேடு, ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.

 

பிடிபட்டவர்களிடமிருந்து 10 பவுன் தாலி சரடு, இருசக்கர வாகனம், செல்போன், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.