Skip to main content

கள்ள நோட்டு கும்பல் கைது! 2 சொகுசு கார், ரொக்கம் பறிமுதல்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

ஆத்தூர் அருகே, கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், மும்முடி பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கடந்த நான்கு நாள்களில் அடுத்தடுத்து கடத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தனிப்படையினர் அமைத்து தேடி வந்தனர்.

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இந்நிலையில், ஜூன் 19ம் தேதி மதியம் மல்லியக்கரை அருகே உள்ள கருத்த ராஜபாளையத்தில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரை மக்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, மல்லியக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரிய வந்தது. மல்லியக்கரையில் ஆட்டோ மீது அருண்குமாரின் கார் மோதி உள்ளது. அதனால்தான் அந்தப்பகுதி மக்கள் காரை துரத்தி வந்தது தெரிய வந்தது. 

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு, கள்ளநோட்டு கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரதீப் (42) என்பவன்தான் கள்ளநோட்டு கும்பலுக்கு தலைவனாக செயல்படுவதும், அவன் தற்போது கரூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.

 

 Police arrest counterfeit note gang,2 Luxury car, cash seized!


இதையடுத்து, அருண்குமாரை காவல்துறையினர் பிரதீப்பிடம் செல்போனில் பேச வைத்தனர். அருண்குமார் அழைத்ததன் பேரில், பிரதீப் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான திருச்சி சதீஸ்குமார் (30), சின்னசேலம் மேனகா (28) ஆகியோர் மல்லியக்கரைக்கு வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ''கள்ளநோட்டு கும்பல் தலைவன் பிரதீப், சேலத்தில் தங்கி ஆரம்பத்தில் சின்னச்சின்ன அளவில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்துள்ளான். இதில் மயங்கும் ஆள்களிடம் பெரிய அளவில் நல்ல ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக இரு மடங்கு கள்ளப்பணத்தை கைமாற்றி வந்துள்ளான். இந்த கும்பலுக்கு இன்னும் யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.