Skip to main content

பாமக பிரமுகர் வெட்டிக் கொலை; போலீசார் தீவிர விசாரணை 

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

pmk member hacked to passed away

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ளது கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் 45 வயது ஆதித்யன். இவர் பாமக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இவரது உறவினர் லட்சுமி நாராயணன். இவர்கள் இருவருக்கும் இடையில் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆதித்யன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு, தனது ஊரான கப்பியாம்புலியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மண்டபம் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கும் வாதநாரயணன் வாய்க்கால் பகுதிக்கும் இடையே சில மர்ம நபர்கள் ஆதித்யனை வழி மறித்துள்ளனர்.  அவரும் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் ஆதித்யனை சரமாரியாக கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இந்தச் சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தெரிவிக்க, இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஆதித்யன் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரடி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆதித்யன் மனைவி சாந்தி அளித்த புகாரில் அவர்களது உறவினர்களான கப்பியாம்புலியூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ராமு ,விஷ்ணு, நாராயணமூர்த்தி, ஆகியோர் காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து, அந்த நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாமக பிரமுகர் கொலை சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஏகப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் இரண்டு மணி அளவில் ஆதித்யன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.