Skip to main content

ஆவடி அருகே ரயிலை கவிழ்க்க சதியா? நள்ளிரவில் நடந்த சம்பவம்!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

piece of wood in Avadi train track

 

திருநின்றவூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டை வைத்தது தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் இரயில்கள் திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் திருவள்ளூர் தாண்டி திருநின்றவூர் அருகே ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் வந்தபோது, அந்த இரயில் இஞ்ஜினில் தென்னைமரத் துண்டு ஒன்று சிக்கியிருக்கிறது. இதனை அறிந்த இரயில் ஓட்டுநர் சாதுரியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். அதன்பின் இரயில் ஓட்டுநர் அந்த தென்னைமரத் துண்டை அப்புறப்படுத்தி அருகில் உள்ள ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி அந்த மரத் துண்டை ஒப்படைத்துள்ளார். 

 

piece of wood in Avadi train track

 

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் அந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த வழியாக செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள சந்தேகம் தரக்கூடிய சில நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார். 

 

தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டு இருந்தது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருவள்ளூர்  மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் வீடு ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்துள்ளது. இவர் தனது வீட்டில் இருந்த தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளத்தின் ஓரமாகப் போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் சிலர் அந்த தென்னைமரத் துண்டை எடுத்து எக்ஸ்பிரஸ் இரயில் செல்லும் தண்டவாளத்தில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

 

சமீபத்தில் திருச்சி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் லாரி டயர்களை வைத்திருந்தனர். இது தொடர்பாக விசாரித்து வரும் இரயில்வே காவல்துறையினர் ரயிலை கவிழ்க்க சதியா எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது திருநின்றவூர் பகுதியில் இரயில் தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டை வைத்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.